காஷ்மீரில் உணவுக்காக மக்கள் வீட்டிற்குள் புகுந்த பயங்கரவாதிகள்; தேடுதல் வேட்டை தீவிரம்
காஷ்மீரில் உணவுக்காக மக்கள் வீட்டிற்குள் புகுந்த பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் மஜல்டா பகுதியில் உள்ள வனப்பகுதியில், பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக உளவுத்துறையினர் அளித்த தகவலின்படி ராணுவம் மற்றும் சிஆர்பிஎப் அடங்கிய பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். உடனடியாக பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கு இடையே கடுமையான மோதல் நடந்தது. தொடர்ந்து பயங்கரவாதிகள் மூன்று பேர் பதுங்கி இருப்பதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்திருந்தனர்.
கடந்த ஒரு வாரமாக, மஜல்டா பகுதியில் உள்ள வனப்பகுதியில், தேடுதல் வேட்டை தொடர்ந்து நீடித்தது. தற்போது மஜல்டா பகுதியின் சோன் கிராமத்தில் உள்ள ஒரு பொதுமக்கள் வீட்டிற்குள் மூன்று பயங்கரவாதிகள் நுழைந்து குடும்பத்திடம் உணவு கோரினர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கிராமவாசிகள் உடனடியாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் அளித்தனர். இதனால் பாதுகாப்பு படையினர் உடனடியாக அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர்.
தற்போது, பயங்கரவாதிகளைத் தேடும் நடவடிக்கையை பாதுகாப்புப் படைகள் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை பயங்கரவாதிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. கிராமத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டு, பல்வேறு பக்கங்களிலிருந்தும் ஒரே நேரத்தில் சோதனை நடவடிக்கை தொடங்கப்பட்டு தீவிரமாக நடந்து வருகிறது. உணவு கோரி மக்கள் வீட்டிற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?