news Breaking News
clock

கழிஞ்சூர் ஸ்ரீ செல்வ விநாயகர் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பு!

கழிஞ்சூர் ஸ்ரீ செல்வ விநாயகர் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பு!


வேலூர், ஆக. 27-

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், கழிஞ்சூர் ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சுயம்புவாக தோன்றிய ஸ்ரீ செல்வ விநாயகரை பக்தர்கள் கண்டெடுத்து கோயில் கட்டி வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கியதை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் செய்து சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜை மற்றும் அலங்காரத்துக்கான ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர் ஸ்ரீ தணிகைவேல் ஐயர் விமரிசையாக செய்திருந்தார். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News