கர்நாடகாவில் குகையில் 2 மகள்களுடன் தங்கியிருந்த ரஷ்ய பெண் மீட்பு

கர்நாடகாவில் குகையில் 2 மகள்களுடன் தங்கியிருந்த ரஷ்ய பெண் மீட்பு

பெங்களூரு:

கர்​நாட​கா​வில் அடர் வனப்​பகு​தி​யில் உள்ள குகை​யில் ரஷ்​யாவை சேர்ந்த பெண் ஒரு​வர் தனது 2 மகள்​களு​டன் தங்கி இருந்​தார். அவரை அம்​மாநில போலீ​ஸார் பத்​திர​மாக மீட்​டனர். கர்​நாடகா மாநிலம் உத்தர கன்​னடா மாவட்​டம் கோகர்ணா அருகே ராமதீர்த்தா மலை அமைந்​துள்​ளது.


அங்​குள்ள வனப்​பகு​தி​யில் சுற்​றுலாப் பயணி​கள் சட்​ட​விரோத​மாக மலை​யேற்​றம், சவாரி ஆகிய​வற்​றில் ஈடு​படு​வ​தாக போலீஸாருக்கு தகவல் கிடைத்​தது.


இதையடுத்து கோகர்ணா காவல் நிலைய ஆய்​வாளர் தர் தலை​மையி​லான காவல் துறை​யினர் கடந்த 9-ம் தேதி ரோந்து பணியில் ஈடு​பட்​டனர். அப்​போது வனப்​பகு​தி​யில் நிலச்​சரிவு அபா​யம் மிகுந்த பகு​தி​யில் உள்ள குகை​யில் பெண் ஒரு​வர் தங்கியிருப்​பதை கண்​டறிந்​தனர். இதையடுத்து 3 பேரை​யும் போலீ​ஸார் பத்​திர​மாக மீட்டு விசா​ரணை நடத்​தினர்.



கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் கோகர்ணா

அருகே உள்ள ராமதீர்த்தா மலை குகையிலிருந்து

மீட்கப்பட்ட ரஷ்ய பெண் நினா மற்றும் 2 குழந்தைகள். | படம்: பிடிஐ |

ஆன்​மிகத்​தில் நாட்​டம்: இதுகுறித்து போலீ​ஸார் கூறியதாவது: கு​கை​யில் இருந்து மீட்​கப்​பட்ட பெண்​ணின் பெயர் நினா குடினா (40). ரஷ்​யாவை சேர்ந்த அவர் தனது மூத்த மகள் பிரேமா (6), இளைய மகள் அமா (4) ஆகியோ​ருடன் கடந்த 2017-ம் ஆண்டு கோவாவுக்கு சுற்​றுலா பயணி​யாக வந்​தார். ஆன்​மிகத்​தில் நாட்​டம் கொண்ட அவர், இங்​குள்ள சாமி​யார்​களின் மடங்​களில் தங்கி யோகாசனம் கற்​றுள்​ளார்.


2018 ஏப்​ரல் 19-ல் நேபாளத்​துக்கு சென்​றுள்​ளார். அங்​கிருந்து மீண்​டும் கோவாவுக்கு வந்த நினா, சட்​ட​விரோத​மாக இந்​தி​யா​வில் தங்கி​யிருந்​தார் கோவா​வில் இருந்து கடந்த மே மாதம் கோகர்ணா வந்த நினா, உள்​ளூர் சாமி​யார் ஒரு​வரின் ஆசிரமத்​தில் தங்கி இருந்​தார். பின்​னர் அவரது அறி​வுரை​யின் பேரில் குகை​யில் தியானம் செய்ய அங்கு சென்​றுள்​ளார்.


ஒரு வார​மாக அங்கு தங்​கி​யிருந்த 3 பேரை​யும் மீட்​டு, தேவை​யான சிகிச்​சை​யும் உளவியல் சிகிச்​சை​யும் வழங்​கப்​பட்​டது. அதன் பிறகு சுவாமி யோகரத்னா சரஸ்​வதி நடத்​தும் ஆசிரமத்​துக்கு அனுப்பி வைத்​திருக்​கிறோம். அவரை ரஷ்​யா​வுக்கு மீண்​டும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்​து வரு​கின்​றோம். இவ்வாறு போலீஸார் கூறினர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%