ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி! சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி! சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

பென்னாகரம்: .

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியுள்ள நிலையில், காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு தருமபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.


கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்து வந்த மழையின் காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின.


கர்நாடக அணைகளின் பாதுகாப்புக் கருதி காவிரி ஆற்றில் சுமார் ஒரு லட்சம் வரை உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. தற்போது நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்து வருவதால் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவுகளும் குறைக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து சரிய தொடங்கியுள்ளது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தின் அளவானது வியாழக்கிழமை நிலவரப்படி வினாடிக்கு 28,000 கன அடியாக இருந்த நீர்வரத்து வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வினாடிக்கு 20,000 கன அடியாக குறைந்ததது.


தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து நீர்வரத்து சரிந்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கு 5 நாள்களுக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் அனுமதி அளித்துள்ளார்.


இருப்பினும் அருவிகளில் குளிப்பதற்கு தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. காவிரி கரையோர பகுதிகளில் வருவாய் துறையினர், காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரியின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்து குறைந்து வரும் நிலையில், மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தின் அளவுகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%