....................திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் நவம்பர் -3 ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீ வீரட்டேஸ்வரர்,ஸ்ரீ நந்தி பகவான், மற்றும் ஸ்ரீ மீனாட்சி உடனமர் சுந்தரேஸ்வரருக்கு எண்ணற்ற வாசனை திரவங்களை கொண்டு பால், தயிர், சந்தனம், விபூதி, இளநீர்,தேன், பஞ்சாமிர்தம், வெட்டிவேர் சிறப்பு அபிஷேகங்கள், வண்ணமலர் மாலைகளால், அலங்காரங்கள், பிரசாதம், நெய்வேத்தியங்கள், வேத மந்திரங்கள் ஒலிக்க, சங்குகள் முழங்க, மேள தாளங்கள் ஒலிக்க மஹா தீபாராதனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் அரோகரா அரோகரா என்று முழக்கமிட்டு நந்திகேச பெருமானை வேண்டி அருள் பெற்றனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?