என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி !

என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி !

 கவிஞர் இரா .இரவி !


பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து !

பயணப்பட்டு பூமிக்கு வருகிறேன் நான் !


என்னை நீங்கள் வரவேற்காவிட்டாலும் !

என்னை நீங்கள் வீணடிக்காதீர்கள் !


சூரியனின் தயவால் கடலிலிருந்து ஆவியாகி !

சுத்திகரிக்கப்பட்டு நல்ல தண்ணீராய் வருகிறேன் !


முழுவதுமாக என்னை சேகரித்து வைத்தால் !

மூன்று தலைமுறைக்கும் பஞ்சம் வராது !


கல்நெஞ்சம் படைத்த கர்னாடகத்திடம் !

கெஞ்ச வேண்டிய அவசியம் இருக்காது !


மரங்கள் துளிர்க்க நான் உதவுகின்றேன் !

நாங்கள் பூமிக்கு வர மரங்கள் உதவுகின்றன !


மரங்கள் வளர்க்க வேண்டியது கடமை !

மரங்களை வெட்டி வீழ்த்துவது மடமை !


சிறுதுளி பெரு வெள்ளம் என்பது உண்மை !

சிதறாமல் சேகரித்தால் வருவது வளமை !

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%