news Breaking News
clock

எஃகு வேலி அமைக்க அனுமதி

எஃகு வேலி அமைக்க அனுமதி


வனப் பகுதியில் இருந்து யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கவும், மனித-விலங்குகள் மோதல்களை குறைக்கும் வகையிலும், கோவை மாவட்டத் தில் தொண்டாமுத்தூர்-தடாகம் இடையே 10 கிலோ மீட்டர் தூரத் திற்கு எஃகு கம்பி வேலி அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி. பரத சக்கரவர்த்தி ஆகி யோர், கோவையில் எஃகு வேலிகள் அமைக்க உள்ள பகுதி களில் செப்.5, 6 ஆம் தேதிகளில் நேரில் ஆய்வு செய்தனர். தங்கள் ஆய்வில் வனத் துறையினர், உள்ளூர் பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்களை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், “யானை கள் ஊருக்குள் நுழைந்து மனித உயிர்களுக்கும், பயிர்களுக் கும் பாதிப்பை ஏற்படுத்துவதை தடுக்க எஃகு வேலி 


வழித்தட நிலங்களை கையகப்படுத்த அனுமதி, நீலகிரி மாவட்டம் சேகூர் யானை கள் வழித்தடத்தில் உள்ள தனியார் நிலங்களை கையகப்படுத்தும் நடவ டிக்கைகளை 6 மாதங் களில் தொடங்க தமிழ் நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. மேலும், யானைகள் போக்குவரத்துக்கு இடை யூறு ஏற்படுத்தாமல், மின்வேலிகள் அமைக் காமல் விவசாயப் பணி களை மேற்கொள்ளவும் அனுமதி அளித்துள்ளனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News