உள்ளாட்சி தனி அலுவலர் பதவிக்காலம் மீண்டும் நீட்டிப்பு
Oct 18 2025
119
சென்னை, அக். 16 - காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளைத் தவிர்த்து 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2025 ஜனவரி 5-ஆம் தேதியோடு முடிவடைந்தது. ஊராட்சிகளில் மறுசீரமைப்பு, சிற்றொகுதிகளில் எல்லை மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு செயல்முறைகளுக்கு இன்னும் சிறிது கால அவகாசம் தேவைப்படும் என்பதால், தேர்தல் நடைபெறும் வரை இந்த ஊராட்சிகளின் அன்றாட விவகாரங்களை நிர்வகிப்பதற்காக தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் ஜூலை 5-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 28 மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை 2026 ஜனவரி 5 வரை நீட்டிப்பு செய்வதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த பதவி நீட்டிப்புக்கான சட்ட முன்வடிவை அமைச்சர் ஐ.பெரியசாமி வியாழனன்று சட்டப்பேரவையில் அறிமுகம் செய்து வைத்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?