news Breaking News
clock

ஆசிரியர் அல்லாத பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் ஆட்சேர்ப்பு

ஆசிரியர் அல்லாத பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் ஆட்சேர்ப்பு



சென்னை, அக்.16- 22 மாநில பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வா ணையம் (TNPSC) மூலமாக நிரப்பு வதற்கான சட்டத்திருத்த முன்வடிவை மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சட்டப்பேரவையில் வியாழனன்று அறிமுகம் செய்தார். இதன் மூலம் மிகவும் திறமையான தொழில்முறை மற்றும் வெளிப்படையான ஆட்சேர்ப்பு நடைபெறும். மேலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டால் மாநி லத்தின் கிராமப்புற மற்றும் தொலை தூரப்பகுதிகளில் உள்ள இளைஞர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் ஆட்சேர்ப்பில் உள்ள சிக்கலான பணிகளிலிருந்து பல்கலைக்கழ கங்கள் விடுவிக்கப்படுவதன் மூலம், அவை கற்பித்தல் பணியில் முழுக் கவனம் செலுத்த வாய்ப்பாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News