ஜெருசலேம்: லெபனானின் தெற்கு பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை குறைக்க வேண்டும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஒரு வருடங்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் கோபம் அடைந்த இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தியது. கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் இருநாடுகளுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இருப்பினும், லெபனானின் தெற்கில் 5 இடங்களில் இஸ்ரேல் தனது படைகளை நிறுத்தியுள்ளது. அங்கிருந்து ஹிஸ்புல்லா அமைப்பினரின் நிலைகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. அண்மையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாக லெபனானின் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேல் படைகள் குவிக்கப்பட்டிருக்கும் லெபனானின் தெற்கு பகுதியில் இருந்து ஆயுதங்களை ஹிஸ்புல்லா அமைப்பினர் குறைக்க வேண்டும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியதாவது; ஹிஸ்புல்லா அமைப்பினர் நெருப்புடன் விளையாடுகின்றனர். லெபனானின் தெற்கில் ஆயுதங்களை குறைக்க வேண்டும். இதனை மீறினால் அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும். வடக்கில் வாழும் மக்களுக்கான அச்சுறுத்தலை நாங்கள் அனுமதிக்க மாட்டோம், என்று லெபனானை எச்சரித்துள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?