
திருவண்ணாமலை மாவட்டம் 08.07.2025 கீழ்பென்னாத்தூரில் அமைந்திருக்கும் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீ மீனாட்சி உடனமர் சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனை வண்ணமலர்களால் அலங்கரித்து வேத மந்திரங்கள் முழங்க, சங்குகள் முழங்க, பல வண்ண மலர்களால், வில்வத்தினால் அர்ச்சனைகள் செய்து பூஜைகளுடன் நெய்வேத்திய பிரசாதங்களுடன் தீபாராதனை நடைபெற்றது. உற்சவர் அலங்காரத்துடன் ஆலயம் மூன்று முறை சுற்றி வந்தது. ஏராளமான பக்தர்கள் வேண்டி அருள் பெற்றனர் பிரசாதங்களும் வழங்கப்பட்டன. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?