சென்னை: தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா அறிக்கை:
தமிழக கல்வித்துறையில், இடைநிலை ஆசிரியர்கள் முறையான ஊதியம் மற்றும் சலுகைகளை எதிர்பார்த்து, நீண்ட காலமாக காத்திருக்கின்றனர். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தாலும், பணி மற்றும் தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படவில்லை.
'சம வேலைக்கு சம ஊதியம்' என்பதே, அவர்களின் முக்கிய கோரிக்கை. இந்த கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கான, உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு வழங்கும் வகையில், முன்பிருந்த நடைமுறையை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%