அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில்...!!

அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில்...!!


இந்த கோயில் எங்கு உள்ளது?


🙏 ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி என்னும் ஊரில் அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.


இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?


🙏 கொடுமுடி என்னும் ஊரில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.


இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?



🙏 இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.


🙏 இங்கே மூன்று முகம் கொண்ட பிரம்மனை தரிசிக்கலாம். வன்னி மரத்தடியில் இவர் அருள்பாலிக்கிறார்.


🙏 ஆஞ்சநேயர் கோரமான பல்லுடன் இங்கே காட்சி தருகிறார்.


🙏 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 210 வது தேவாரத்தலம் ஆகும்.


🙏 தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டுத்தலங்களில் இது 6வது தலம்.


வேறென்ன சிறப்பு?


🙏 இத்தலத்தில் உள்ள வன்னிமரத்தின் வயதை கணக்கிட முடியவில்லை.


🙏 மிகவும் பழமையான இந்த மரத்தில் பூ பூக்கும். ஆனால் காய் காய்க்காது. ஒரு பக்கம் முள் இருக்கும். மற்றொரு பக்கம் முள் இல்லை.


🙏 இந்த மரத்தின் இலையை தண்ணீரில் போட்டால் எவ்வளவு நாளானாலும் தண்ணீர் கெடுவதில்லை. 


🙏 பழநி பங்குனி உத்திர விழாவிற்கு தீர்த்தக்காவடி கொண்டு செல்லும் போது, காவிரி தீர்த்தத்தில் இந்த இலைகளை போட்டு தான் பக்தர்கள் பாதயாத்திரையாக கொண்டு செல்கிறார்கள்.


🙏 காவிரி ஆற்றின் கரைக்கருகில் இக்கோயில் உள்ளது. வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடிவரும் காவிரி ஆறானது இவ்விடத்தில் கிழக்கு நோக்கி திசைமாறிச் செல்கிறது.


என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?


🙏 சித்திரை திருவிழா 11 நாள் கொண்டாடப்படுகிறது.


🙏 ஆடிப்பெருக்கன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.


🙏 பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷ நாட்களிலும் விசேஷ பூஜை உண்டு.


எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?


🙏 ராகு கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் பரிகாரம் செய்து திருமணத்தடை நீங்குதல், குழந்தைப்பேறு ஆகியவை அடையப்பெறுகிறார்கள்.


🙏 ஒருவருக்கு எத்தனை வயதோ, அத்தனை குடம் தண்ணீர் எடுத்து விநாயகருக்கு ஊற்ற வேண்டும்.


🙏 நாகதோஷம் நீங்க வன்னி மரத்தடியில் கல்லில் செய்த நாகரை பிரதிஷ்டை செய்ய வேண்டும்.


🙏 நவக்கிரக பூஜை செய்து, வாழை மரத்திற்கு தாலி கட்டும் பழக்கமும் இங்கு உள்ளது.


🙏 அறுபதாம் கல்யாணம், ஆயுள் ஹோமம் ஆகியவை நடத்த இத்தலம் விசேஷமானது.


🙏 ஆதிசேஷனால் உருவான கோயில் என்பதால், இங்கு நாகர் வழிபாடு விசேஷம். 


🙏 அமாவாசை தினங்களில் பிதுர் தர்ப்பணம் செய்யப்படுகிறது. 


இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?


🙏 தங்களது வேண்டுதல் நிறைவேறியவுடன் பக்தர்கள் சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர்.

 


 

Thanks and regards 

A s Govinda rajan 

17/5 Sri andal flats andavar nagar second Street Kodambakkam Chennai 

600024

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%