7 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞருக்கு 14 ஆண்டு கடுங்காவல் சிறை

7 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞருக்கு 14 ஆண்டு கடுங்காவல் சிறை

திருவள்ளூர்:

திரு​வள்​ளூர் மாவட்​டம், ஆவடி அருகே உள்ள முத்​தா புதுப்​பேட்டை பகு​தியை சேர்ந்​தவர் 7 வயது சிறு​வன். இச்சிறுவனை, கடந்த 2023-ம் ஆண்டு ஏப். 14-ம் தேதி, முத்​தாபுதுப்​பேட்​டையை அடுத்த பால​வேடு பகு​தியை சேர்ந்த பிர​வீன் (21) பாலியல்​ரீ​தி​யாக துன்​புறுத்​தி​யுள்​ளார். இதுதொடர்​பாக சிறு​வனின் பெற்​றோர் அளித்த புகாரின் அடிப்​படை​யில், பட்​டாபி​ராம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீ​ஸார், போக்சோ சட்​டத்​தின் கீழ் வழக்​குப் பதிவு செய்​து, பிர​வீனை கைது செய்​தனர்.


இந்த வழக்கு விசா​ரணை, திரு​வள்​ளூரில் உள்ள மாவட்ட போக்சோ சிறப்பு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வந்​தது. முடிவுக்கு வந்த வழக்கு விசா​ரணை​யில், பிர​வீன் மீதான குற்​றம் நிரூபிக்​கப்​பட்​டது. இதையடுத்​து, இவ்​வழக்கு தொடர்​பான தீர்ப்​பை, திரு​வள்​ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதி​மன்ற நீதிபதி உமா மகேஸ்​வரி நேற்று முன் தினம் அளித்​தார்.


அதில், பிர​வீனுக்கு 3 சட்​டப்​பிரிவு​களின் கீழ், 14 ஆண்​டு​கள் கடுங்​காவல் சிறை தண்​டனை​யும், ரூ.25 ஆயிரம் அபராத​மும் விதித்து நீதிபதி உமாமகேஸ்​வரி உத்​தர​விட்​டுள்​ளார். மேலும், பாதிக்​கப்​பட்ட சிறு​வனுக்கு நிவாரண​மாக அரசு ரூ. 3 லட்​சம் வழங்​க​வும் நீதிபதி தன் தீர்ப்​பில் உத்​தர​விட்​டுள்​ளார்.


சென்​னை, எண்​ணூர் அருகே உள்ள எர்​ணாவூர் பகு​தியை சேர்ந்த 13 வயது சிறுமியை கடந்த 2019-ம் ஆண்டு எர்​ணாவூர் சுனாமி குடி​யிருப்பை சேர்ந்த டில்​லி​பாபு (22) பாலியல்​ரீ​தி​யாக துன்​புறுத்​தி​யுள்​ளார். டில்​லி​பாபு மீதான குற்​றம் நிரூபிக்​கப்​பட்​டதையடுத்து, திரு​வள்​ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதி​மன்ற நீதிபதி உமாமகேஸ்​வரி நேற்று அளித்த தீர்ப்​பில், டில்​லி​பாபுக்கு 3 சட்​டப்​பிரிவு​களின் கீழ், 9 ஆண்​டு​கள் கடுங்​காவல் சிறை தண்​டனை​யும், ரூ.15 ஆயிரம் அப​ராத​மும்​ விதித்​து உத்​தர​விட்​​டார்​.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%