news Breaking News
clock

500 கோடி ஆண்டுகளுக்கு பிறகு பூமி எங்கே இருக்கும் தெரியுமா? விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்..!

500 கோடி ஆண்டுகளுக்கு பிறகு பூமி எங்கே இருக்கும் தெரியுமா? விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்..!


விஞ்ஞானிகள் ஒரு எச்சரிக்கை கொடுத்திருக்காங்க. அது நம்ம பூமியோட எதிர்காலம் பத்தினது. ஆனா, பயப்பட வேண்டாம், இது நடக்குறதுக்கு இன்னும் 500 கோடி வருஷம் இருக்கு.


1. இப்போ சூரியன் ஏன் நிலையா இருக்கு? (சமநிலை)


ஒரு நட்சத்திரத்தோட கதை, பெரிய தூசி மற்றும் வாயு மேகத்துல ஆரம்பிக்குது. ஈர்ப்பு விசை (Gravity) அந்த மேகத்தை ஒண்ணு சேர்த்துச் சுருக்குறப்போ, அது ரொம்பச் சூடாகி, உள்ளே எரிதல் (அணுக்கரு இணைவு) தொடங்கிடும். அப்படித் தொடங்கி எரிஞ்சு, ஒளிர ஆரம்பிக்கிறப்போதான், அது ஒரு முழு நட்சத்திரமாப் பிறக்குது.


நம்ம சூரியன் இப்போ ரொம்ப அமைதியா, நிலையா இருக்கு. அதுக்குக் காரணம்:


உள்நோக்கி இழுக்கும் விசை: சூரியனோட ஈர்ப்பு விசை (Gravity) அதை உள்ளே இழுத்துச் சுருங்க வைக்குது.


வெளித் தள்ளும் விசை: சூரியனோட மையத்துல ஹைட்ரஜன் எரிபொருள் வெடிச்சு, வெளியே ஒரு அழுத்தத்தைக் கொடுக்குது.


இந்த இரண்டுக்கும் நடுவுல சமநிலை இருக்குுறதாலதான், சூரியன் ஒரே சைஸ்ல நிலையா இருக்கு. ஆனா, இந்தச் சமநிலை ஒருநாள் மாறும்.


2. சூரியன் பலூன் மாதிரி வீங்க ஆரம்பிக்கும்!


சுமார் 500 கோடி வருஷத்துல, சூரியனுக்குள்ள இருக்கிற ஹைட்ரஜன் எரிபொருள் (Nuclear Fuel) தீர்ந்துடும்.


சமநிலை தவறும்: ஹைட்ரஜன் தீர்ந்ததும், சூரியனோட மையப்பகுதி உள்ளே சுருங்க ஆரம்பிக்கும்.


இந்தச் சுருக்கத்தால, மையத்துல இருக்கிற ஹீலியம் சூடாகி, கார்பனா எரிய (Fuse) ஆரம்பிக்கும். இந்த அதீத சக்திதான், சூரியனோட வெளி அடுக்குகளைப் பிரமாண்டமா வீங்க வைக்கும்.


நீண்ட எரிதல் காலம்: ஹைட்ரஜனை எரிப்பதைவிட, ஹீலியம் எரியும் கட்டத்தில் நட்சத்திரங்கள் சுமார் 10 முதல் 20 பில்லியன் ஆண்டுகள் வரை தொடர்ந்து ஒளிரும்.


சிவப்பு ராட்சசன்: இந்த மாற்றம் காரணமாகச் சூரியன் இப்போ இருக்குறதைவிட 100 முதல் 1000 மடங்கு வரை பெருசாகி, ஒரு 'சிவப்பு ராட்சசக் கோளமா' (Red Giant) மாறும்.


முதல் பலி: இந்த விரிவாக்கத்துல, சூரியனுக்கு ரொம்ப பக்கத்துல இருக்குற புதன், வெள்ளி ஆகிய இரண்டு கோள்களையும் அது முழுசா விழுங்கிவிடும்.


3. நட்சத்திரங்களின் இறுதி முடிவு என்ன?


சூரியன் தன் வாழ்வின் கடைசி அத்தியாயமான 'முக்கிய வரிசைக்குப் பிந்தைய கட்டத்தை' (Post-Main Sequence phase) அடையும்போது, அதன் அளவைப் பொறுத்து அது சிவப்பு குள்ளன் (Red Dwarf), வெள்ளைக் குள்ளன் (White Dwarf), சிவப்பு ராட்சசன் (Red Giant) அல்லது சில சமயம் நியூட்ரான் நட்சத்திரமாகக்கூட (Neutron Star) வெடித்துச் சிதறும்.


4. பூமிக்கு வரும் இரண்டு பெரிய ஆபத்துகள்


சூரியன் இப்படி ராட்சசனா மாறின பிறகு, நம்ம பூமிக்கு என்ன ஆகும்னு லண்டன், வார்விக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சொல்றாங்க:


ஆபத்து 1: சூரியன் இழுக்கும் (அலை விசை)


ராப்பகல் சுழலும் சந்திரன், கடல்ல அலைகளை உருவாக்குற மாதிரி, இந்த வீங்கின ராட்சச சூரியன், பூமியையும் தன்னோட ஈர்ப்பு விசைக்குள் (Pulling Force) அதிகமா இழுக்கும்.


டாக்டர் எட்வர்ட் பிரையண்ட் தலைமையிலான ஆய்வாளர்கள், இந்த இழுவிசை (Tidal Forces) காரணமா, பூமி மெதுவா சூரியனை நோக்கிப் போய், கடைசியில ஒண்ணு சூரியனுக்குள்ள விழுந்துடும், இல்லன்னா உடைஞ்சு சிதறிடும்னு சொல்றாங்க.


ஆபத்து 2: தீயில் கருகிப் போகும்


பூமி எப்படியோ தப்பிச்சு, சூரியனுக்குள்ள விழாம சுத்தி வந்தாலும், இங்க வாழவே முடியாது.


இந்த ராட்சச சூரியனோட தீவிரமான வெப்பம், பூமியில் இருக்கிற தண்ணி எல்லாத்தையும் ஆவியாக்கிடும்.


நம்ம வளிமண்டலம் முழுவதும் உரித்தெடுக்கப்படும்.


முடிவுல, உயிர்கள் வாழத் தகுதியற்ற, எரிந்த பாறைக் கோளமாகத்தான் பூமி மிஞ்சும். மனிதர்களோ, வேற எந்த உயிரினமோ அங்க இருக்க வாய்ப்பே இல்லை.

 

ஆய்வு கண்டுபிடித்தது என்ன? (அதிர்ச்சித் தகவல்)


இந்த ஆய்வை நடத்திய விஞ்ஞானிகள், 15,000-க்கும் அதிகமான கிரகங்களின் அறிகுறிகளைத் தேடினார்கள்.


மொத்த நட்சத்திரங்களில் சுமார் 0.28% மட்டுமே பெரிய கிரகங்களைக் கொண்டிருந்தன.


130 பெரிய கிரகங்களை அவர்கள் அடையாளம் கண்டனர். இதில் 33 கிரகங்கள் அதுவரை கண்டுபிடிக்கப்படாதவை ஆகும்!


இந்த ராட்சச நட்சத்திரங்களைச் சுற்றி, பெரிய கிரகங்கள் மிக மிகக் குறைவாக இருப்பதைக் கண்டறிந்ததன் மூலம், அந்த நட்சத்திரங்கள் ஏற்கெனவே தங்கள் அருகில் உள்ள கிரகங்களை விழுங்கிவிட்டன என்பதை விஞ்ஞானிகள் உறுதிசெய்தனர். இதே கதிதான் பூமிக்கும் நேரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.


ஆதாரங்கள்: இந்தத் தகவல்கள் சுமார் அரை மில்லியன் நட்சத்திரங்களைப் பார்த்து விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின் அடிப்படையில் 'Monthly Notices of the Royal Astronomical Society' என்ற அறிவியல் பத்திரிகையில் வெளியிடப்பட்டது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News