news Breaking News
clock

4 பேர் உயிரிழப்பு, பாஜக அலுவலகம் சூறை: லடாக் வன்முறை குறித்து நீதித்துறை விசாரணைக்கு உத்தரவு

4 பேர் உயிரிழப்பு, பாஜக அலுவலகம் சூறை: லடாக் வன்முறை குறித்து நீதித்துறை விசாரணைக்கு உத்தரவு



லே: செப்டம்பர் 24 அன்று லே நகரில் நடந்த வன்முறை போராட்டம் மற்றும் நான்கு பேர் உயிரிழந்தது குறித்த நீதித்துறை விசாரணைக்கு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


லடாக் பகு​திக்கு மாநில அந்​தஸ்​தும் அரசி​யலமைப்பு சட்​டத்​தின் 6-வது அட்​ட​வணை​யில் லடாக்கை சேர்க்க வலி​யுறுத்​தி​யும் பரு​வநிலை செயற்​பாட்​டாளர் சோனம் வாங்​சுக் உண்​ணா​விரதம் மேற்​கொண்டு வந்​தார். அவரது போராட்​டத்​துக்கு ஆதரவு அளிக்​கும் வகை​யில் லடாக்​கில் செப்டம்பர் 24 அன்று முழு அடைப்பு போராட்​டத்​துக்கு ‘லே அபெக்ஸ் பாடி' என்ற அமைப்​பின் இளைஞர் அணி அழைப்பு விடுத்​தது.


செப்டம்பர் 24 அன்று லே நகரில் திரண்ட போராட்​டக்​காரர்​கள் அங்​குள்ள லடாக் மலைப்​பகுதி மேம்​பாட்டு தன்​னாட்சி கவுன்​சில் அலு​வல​கம் மற்​றும் பாஜக அலு​வல​கம் மீது தாக்​குதல் நடத்​தினர். மேலும் போலீ​ஸார் மீது கற்​களை வீசிய அவர்​கள், சிஆர்​பிஎப் வேன் உட்பட பல வாகனங்​களுக்கு தீவைத்து எரித்​தனர். இதையடுத்து போலீ​ஸார் தடியடி நடத்​தி​யும் கண்​ணீர் புகை​குண்​டு​களை வீசி​யும் வன்​முறை​யாளர்​களை விரட்​டினர். இந்த கலவரத்​தில் 4 பேர் உயி​ரிழந்​தனர், 60-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர்.


செப்டம்பர் 24 அன்று லே நகரில் நடந்த வன்முறை போராட்டம் மற்றும் நான்கு பேர் உயிரிழந்தது குறித்த நீதித்துறை விசாரணைக்கு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணைக்கு நுப்ராவின் துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் ஐஏஎஸ் அதிகாரி முகுல் பெனிவால் தலைமை தாங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த வன்முறைக்கான காரணங்கள் குறித்த விசாரணை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நடத்தப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இந்த விசாரணை அறிக்கை நான்கு வாரங்களுக்குள் சமர்ப்பிக்கப்படும் என்றும், சம்பவம் தொடர்பான தகவல் உள்ள நபர்கள் அக்டோபர் 4 முதல் 18 வரை விசாரணை அதிகாரியிடம் தானாக முன்வந்து அறிக்கை அல்லது ஆதாரத்தை சமர்ப்பிக்குமாறு நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.


லே நகரில் செப்டம்பர் 24, 2025 அன்று வன்முறை போராட்டங்களின் போது போலீஸ் நடவடிக்கையில் கொல்லப்பட்ட நான்கு பேரின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக அமைப்புகள் மற்றும் லே அபெக்ஸ் பாடி மற்றும் கார்கில் ஜனநாயகக் கூட்டணி வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News