3 பேரின் டிஎன்ஏ-க்களுடன் குழந்தைப் பிறப்பு: பரம்பரை நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் மைல்கல் முயற்சி!
Jul 20 2025
80

மருத்துவ உலகின் ஒரு புதிய மைல் கல் என்று சொல்லும் அளவுக்கு, பிரிட்டனில் 3 பேரின் டிஎன்ஏ மூலம் குழந்தை பிரசவிக்கும் முறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த முறையில் அங்கு 8 குழந்தைகள் பிறந்துள்ளன. பரம்பரை நோய்கள் அடுத்த வாரிசுகளுக்கு கடத்தப்படுவதை தடுக்கவே மகப்பேறு சிகிச்சையில் இந்தப் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பம் மூலம் பிறக்கும் குழந்தைகள், தனது தாய், தந்தை மற்றும் கருமுட்டை தானமாக அளிக்கும் பெண் ஆகிய 3 பேரின் டிஎன்ஏ-க்களைப் பெற்றிருக்கும். இவ்வாறாக பெறப்படும் கருமுட்டை தானம் ‘மைட்டோகாண்ட்ரியா தானம்’ (mitochondrial donation) என்று சொல்லப்படுகிறது. அதாவது, ஓர் உயிரணுவில் (செல்லில்) உள்ள அந்த குறிப்பிட்ட பகுதி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
இங்கிலாந்தின் நியூகேஸ்டில் மருத்துவமனை மருத்துவர்கள், விஞ்ஞானிகள் நீண்ட கால சோதனைக்குக் கிடைத்த வெற்றியாக இது கொண்டாடப்படுகிறது. இந்த முறையில் குழந்தைகள் பிறந்தால், அது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு பரம்பரை நோய்கள் கடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் என்று விஞ்ஞானிகள் உறுதியளிக்கின்றனர். உலகம் முழுவதும் பல்வேறு மரபணுக் குறைபாடுகள் பிறக்கும் சிறப்புக் குழந்தைகள் அதன் பெற்றோருக்கு, ஏன் அவர்களுக்குமே சவாலாக இருக்கும் சூழலில், பிறப்பதற்கே முன்பே மரபணு குறைபாட்டை சீர்செய்ய முடியும் என்றால், அது மகப்பேறு சிகிச்சையில் மிகப் பெரிய புரட்சியே.
ஆனால், பரம்பரை நோய்களைத் தடுப்பதற்காக என்று இவ்வாறாக 3 பேரின் டிஎன்ஏக்கள் மூலம் குழந்தைகள் பிரசவிக்கப்படுவது மகிழ்ச்சிக்குரியதா, ஏமாற்றத்துக்குரியதா அல்லது கவலைக்குரியதா என்ற வாத-விவாதங்கள் எழுந்துள்ளன.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?