news Breaking News
clock

*ஸ்ரீ சுந்தரவல்லி தாயாருக்கு மஞ்சள் மாலை அணிவித்தால் யோகம்...!*

*ஸ்ரீ சுந்தரவல்லி தாயாருக்கு மஞ்சள் மாலை அணிவித்தால் யோகம்...!*



வந்தவாசி, நவ 25:


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த நல்லூர் ஸ்ரீ சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சுந்தரவல்லி தாயாருக்கு மஞ்சள் மாலை அணிவித்து பிரார்த்தனை செய்தால் நினைத்த காரியங்கள் வெற்றி உண்டாகும் என்பது ஐதீகம். அத்தகைய நிலையில் பல்வேறு சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மஞ்சள் மாலை அணிவித்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். மேலும் கோவில் பட்டாச்சாரியார் ராஜன் சுவாமிகள் மேற்பார்வையில் தினந்தோறும் மூல மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்படுகிறது.


பா. சீனிவாசன், வந்தவாசி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News