அலுவலகக் கடிகாரம் 10:29 காட்டியது.
அஜய் கணினித் திரையை பார்த்தபடி இருந்தான். இன்னும் ஒரு நிமிடத்தில் அவன் முடிவெடுக்கப் போகிறான்.
அவனுடைய வாழ்க்கையின் முக்கிய முடிவு.
ஆம்... இன்று அவன் தன் ராஜினாமா கடிதத்தைக் கொடுக்கப் போகிறான்.
ஐந்து வருடம் தொடர்ந்து அங்கு சந்தித்த அவமானங்கள், மேனேஜரின் அலட்டலான அலட்சியங்கள்.
வீட்டில் நோயுற்ற தந்தை. பணப்பற்றாக்குறை.
எல்லாமே அந்த ராஜினாமா கடிதத்தை அனுப்பும் ஒரே கிளிக்கில் முடிவடையும்.
மெயில் திறந்தான்.
“அனுப்பு” பட்டன் கண்ணில் பட்டது.
10:29:30
அதே நேரம் மொபைல் அதிர, எடுத்துப் பார்த்தான்..
“அப்பா”
அஜய் ஏனோ அழைப்பை எடுக்கவில்லை.
“அப்பா அட்வைஸ் பண்ணி மனசைக் கலைப்பார்.. வேண்டாம் இப்போ பேசினா மனசு மாறிடும்”
தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.
10:29:50
மெயில் அனுப்ப கையை நீட்டினான்.
அந்த நேரம் மொபைலுக்கு ஒரு
வாய்ஸ் மெசேஜ் வந்தது.
தந்தையின் குரல்:
“மகனே… டாக்டர் சொன்னார்.
இன்னும் ஒரு வாரம் இருந்தா போதும்,
நான் பழைய மாதிரி நடக்க ஆரம்பிச்சிடுவேனாம்.
நீ வேலையை விட்டுட்டு என்னைக் கவனிக்க அவசியமில்லை!"
கடிகாரம் 10:30 அடித்தது.
அஜய் கை நடுங்கியது.
கண்ணில் நீர் திரண்டது.
அவன் மெயிலை மூடினான்.
ராஜினாமாக் கடிதத்தை டிலீட் செய்தான்.
அதே நிமிடம்
புதிய மெயில் வந்தது.
“Promotion Approved.”
அஜய் சிரித்தான்.
ஆனால் அது சந்தோஷச் சிரிப்பு இல்லை, நன்றிச் சிரிப்பு.
ஜன்னல் வழியே வெளியே பார்த்தான்.
வாழ்க்கை பல சமயங்களில் ஒரே ஒரு நிமிடத்தால் மாறும்.

முகில் தினகரன்,
கோயமுத்தூர்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?