ஸ்ரீநகரில் 1.25 லட்சம் குடும்பங்களுக்குத் தடையற்ற மின்சாரம்: உமர் அப்துல்லா
Dec 25 2025
53
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதாக அந்த மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரின் முதல்வர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
புனரமைக்கப்பட்ட விநியோகத் துறைத் திட்டத்தின் சோதனை ஒட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஸ்ரீநகரில் மேலும் 83 பகுதிகளில் 24 மணி நேரம் மின் விநியோகத்தின் கீழ் வெற்றிகரமாகக் கொண்டு வந்ததற்காக காஷ்மீர் மின் விநியோகக் கழகத்திற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
இதன் மூலம், ஸ்ரீநகரில் உள்ள 108 பகுதிகள் இப்போது 24 மணி நேரமும் தடையற்ற மின்சார விநியோகத்தைப் பெறுகின்றன. இதனால் 1.25 லட்சம் குடும்பங்கள், அதாவது நகரத்தின் கிட்டத்தட்ட 48 சதவிகிதம் பேர் பயனடைந்துள்ளன.
24 மணி நேரமும் மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதற்காக மற்ற மாவட்டங்களிலும் இதே போன்ற மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?