மேகம் வானின் தட்டுகளோ- அது
கவிழ்ந்தால் மழையாய் கொட்டிடுமோ!
மேதினி மீதினில் பட்டிடுமோ- அதில்
மேவும் நன்மைகள் கிட்டிடுமோ!
ஏகும் பறவைகள் குரலெடுத்து
ஏர்பிடி உழவர்கள் உழுது விட்டு
தாகம் எடுத்து குடிப்பனரோ-இனி
தாக்கும் வெக்கையை அடிப்பனரோ!
சாகும் உயிரினம் தனை காத்து
சந்தம் படிக்கிற குளிர் காத்து
வாகாய் வளமதை தந்திடுமோ- இல்லை
வறட்சியினாலே வெந்திடுமோ?
ஈகும் மழையினை வான் மேகம்
ஈன்றாள் தானே பசுமை பெறும்!
ஈங்கே மக்கள் மாடுகளும் -நல்
ஈரத்தாலே வாழ்வு பெறும்!
மேகம் வானின் தட்டுகளோ -அது
கவிழ்ந்தால் மழையாய் கொட்டிடுமோ!
மேதினி மீதினில் பட்டிடுமோ- அதில்
மேவும் நன்மைகள் கிட்டிடுமோ!?
வெ.தமிழழகன் எம்ஏ.பிஎட்
சேலம்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?