news Breaking News
clock

வாட்ஸ் அப் பயன்படுத்த ஆக்டிவ் சிம் கார்டு கட்டாயம் - மத்திய அரசு அதிரடி

வாட்ஸ் அப் பயன்படுத்த ஆக்டிவ் சிம் கார்டு கட்டாயம் - மத்திய அரசு அதிரடி



மோசடிகளை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு, வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

வாட்ஸ் அப் என்பது தற்போது தவிர்க்க முடியாத சமூக வலைத்தளங்களில் ஒன்றாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் பல கோடி பேர் வாட்ஸ் சேவையை பயன்படுத்துகிறார்கள். குறுஞ்செய்தி அனுப்புவது மட்டும் இன்றி தற்போது வாட்ஸ் அப் வழியாக அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும். வாட்ஸ் அப்களை டெஸ்க்டாப்பில் அதாவது கணிணி வழியாகவும் இணைத்து பயன்படுத்தலாம். ஆனால், இந்த வசதியை பயன்படுத்தி பல்வேறு மோசடிகளும் அரங்கேறுவதாக சமீப காலமாக புகார்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு, வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


இதன்படி, மொபைலில் ஆக்டிவ் சிம் கார்டு இல்லாவிட்டால் வாட்ஸ் அப் கணக்கு இனி இயங்காது. மொபைலில் உள்ள சிம் கார்டு, அந்தந்த செயலிகளில் இணைக்கப்பட்டிருப்பதை 90 நாட்களுக்கு ஒரு முறை உறுதி செய்ய வேண்டும். அதேபோல வெப்-இல் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை தானாகவே லாக் அவுட் ஆகிவிடும். இது டெலிகிராம், சிக்னல் செயலிகளுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. 6 மணி நேரம் கழித்து மீண்டும் கியூஆர் கோடு பயன்படுத்தி ஸ்கேன் செய்த பிறகுதான் வெப் வாட்ஸ் அப் பயன்படுத்த முடியும்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News