வாக்கு வங்கிக்காக ராமரை வெறுக்கிறார்கள்: காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு

வாக்கு வங்கிக்காக ராமரை வெறுக்கிறார்கள்: காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு



பஹல்பூர், நவ.7-


“பீகாரில் வாக்கு வங்கிக்காக தான் ராகுலும், லாலு குடும்பத்தினரும் ராமரை வெறுக்கின்றனர்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


பீகாரில், 121 சட்டசபை தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நேற்று முடிந்தது. இறுதி கட்ட தேர்தல் வரும் 11ம் தேதி நடக்க உள்ளது. இதில் 20 மாவட்டங்களில் உள்ள, 122 தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தலைெயாட்டி, அராரியா மாவட்டத்தில் நடந்த பா.ஜ.க. தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.


15 ஆண்டுகால காட்டாட்சி


அதில் அவர் பேசியதாவது:-


பீகாரில் ராஷ்டிரீய ஜனதாதளத்தின் 15 ஆண்டுகால காட்டாட்சி நடந்தபோது எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. நெடுஞ்சாலையோ, பாலங்களோ கட்டப்படவில்லை. எந்த உயர்கல்வி மையங்களும் அமைக்கப்படவில்லை. ஆனால், நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி, அந்த சகாப்தத்தில் இருந்து பீகாரை விடுவிக்க கடுமையாக பாடுபட்டது. இன்று பீகாரில் எண்ணற்ற விரைவுச்சாலைகள், பாலங்கள், 4 மத்திய பல்கலைக்கழகங்கள், இதர உயர்கல்வி மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. பா.ஜ.க. கூட்டணியால்தான்இந்த வளர்ச்சி பயணம் தடையின்றி தொடர்வதை உறுதிசெய்ய முடியும். இந்த வளர்ச்சி பயணத்தில் ஊடுருவல் என்ற மிகப்பெரிய சவாலை எங்கள் கூட்டணி சந்தித்துள்ளது. ஒவ்வொரு ஊடுருவல்காரரையும் நாட்டை விட்டு வெளியேற்ற உறுதி பூண்டுள்ளது. ஆனால், காங்கிரஸ்–-ராஷ்டிரீய ஜனதா தள கூட்டணி, அவர்களை பாதுகாக் கிறது. அவர்களுக்கு ஆதரவாக அரசியல் யாத்திரை கள் நடத்துகிறது.


எப்போதெல்லாம் ராஷ்டிரீய ஜனதாதளம் பதவியில் இருக்கிறதோ, அப்போதெல்லாம் ஊடுருவல்காரர்களை பின்வாசல் வழியாக அனுமதிக்கும். வாக்கு வங்கி அரசியலுக்காக இதை செய்கிறது.ஆனால் நாட்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. நம் மக்களுக்கு சொந்தமான அனைத்திலும் ஊடுருவல் காரர்கள் பங்கு கோருகிறார்கள்.


காங்கிரஸ் இளவரசர் (ராகுல்), சாத் பூஜையை நாடகம் என்கிறார். அவர்கள் அயோத்தி சென்று ராமரை தரிசித்தது இல்லை. வாக்கு அரசியலுக்காக அவர்கள் ராமரை வெறுக்கிறார்கள். ஆனால், நிஷாத் ராஜ், மாதா சாப்ரி, மகரிஷி வால்மீகி ஆகியோருக்கான சன்னதிகளில் கூட தரிசனம் செய்ய மனமில்லை. இது பட்டியல் இனத்தினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மீதான அவர்களின் வெறுப்பை காட்டுகிறது.


காங்கிரஸ்-–ராஷ்டிரீய ஜனதாதளம் இடையே உட்பூசல் நிலவுகிறது. தேர்தலுக்கு பிறகு, அனைத்து இந்தியா கூட்டணி கட்சிகளும் ஒருவரை யொருவர் மண்டையை உடைத்துக் கொள்வார்கள். தற்போது, அவர்களின் துணை முதலமைச்சர் வேட்பாளரே காட்டாட்சிக்கு எதிராக பேசும் அளவுக்கு சண்டை உச்சத்தை எட்டி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தொடர்ந்து பிரதமர் பாகல்பூரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசினார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%