வந்தவாசி, நவ 06:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் தெள்ளாறு திருமூலட்டேனேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற அன்னாபிஷேக வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
வந்தவாசி ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற அன்னாபிஷேக விழாவில் படைக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
பா. சீனிவாசன் வந்தவாசி.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?