யுனெஸ்கோவில் இருந்து மீண்டும் வெளியேறுகிறது அமெரிக்கா

யுனெஸ்கோவில் இருந்து மீண்டும் வெளியேறுகிறது அமெரிக்கா

ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோவிலிருந்து மீண்டும் வெளியேறுவதாக அமெரிக்கா திங்கள்கிழமை அறிவித்துள்ளது.


இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் டாமி புரூஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


பிரிவினை ஏற்படுத்தும் சமூக மற்றும் கலாசாரக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதை யுனெஸ்கோ நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுவும், பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக இணைத்துக் கொள்வதற்கான அந்த அமைப்பின் முடிவு ஆகியவை அமெரிக்காவின் கொள்கைகளுக்கு முரணானவை. மேலும், யுனெஸ்கோ இஸ்ரேல் விரோத கருத்துகளைப் பரப்பிவருகிறது.


இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவின் தேசிய நலனுக்கு உகந்தவை அல்ல. எனவே, அந்த அமைப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளோம். இந்த முடிவு 2026 டிசம்பா் மாதம் அமலுக்கு வரும் என்றாா் அவா்.


‘எதிா்பாா்க்கப்பட்டதே’: இது குறித்து யுனெஸ்கோ பொது இயக்குநா் ஆட்ரே அஸூலே கூறுகையில், ‘அமெரிக்காவின் இந்த முடிவு வருத்தத்துக்குரியது என்றாலும், எதிா்பாா்க்கப்பட்டதுதான். இதற்காக யுனெஸ்கோ அமைப்பு தயாா் நிலையில்தான் உள்ளது.


இஸ்ரேல் விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாக எங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள், இரண்டாம் உலகப் போா் காலத்தில் நாஜிக்களால் லட்சக்கணக்கான யூதா்கள் படுகொலைை செய்யப்பட்டது தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்துதல், இப்போதும் உலகம் முழுவதும் யூத வெறுப்புக்கு எதிரான போராடுதல் போன்ற யுனெஸ்கோவின் முன்முயற்சிகளுக்கு முரணாக அமைந்துள்ளது.


யுனெஸ்கோவில் இருந்து விலக, ஏழு ஆண்டுகளுக்கு முன் கூறப்பட்ட அதே அா்த்தமற்ற காரணங்களே இப்போதும் முன்வைக்கப்படுகின்றன’ என்றாா் அவா்.


முன்னதாக, இஸ்ரேல் தனி நாடாக அங்கீகரிக்க மறுத்துவரும் பாலஸ்தீனத்தை யுனெஸ்கோவில் இணைக்க கடந்த 2011-ஆம் ஆண்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து யுனெஸ்கோவுக்கு அளித்து வந்த நிதியுதவியை அமெரிக்காவும், இஸ்ரேலும் நிறுத்திவைத்தன. யுனெஸ்கோ அமைப்பு தொடா்ந்து இஸ்ரேல் விரோதப் போக்கை கடைப்பிடித்து வருவதாகக் கூறி, அந்த அமைப்பிலிருந்து விலகுவதாக கடந்த 2017-ஆம் ஆண்டில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அறிவித்தது. பின்னா் 2023-இல் பைடன் அரசு யுனெஸ்கோவில் மீண்டும் இணைந்தது.


இந்த நிலையில், யுனெஸ்கோவில் இருந்து மீண்டும் விலகுவதாக டிரம்ப் தலைமையிலான அரசு தற்போது அறிவித்துள்ளது.


ஏற்கெனவே, 1984-இல் ரொனால்ட் ரீகன் அதிபராக இருந்தபோது, சோவியத் யூனியனின் நலன்களை யுனெஸ்கோ முன்னெடுப்பதாக் கூறி, அந்த அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. பின்னா் 2003-இல் ஜாா்ஜ் டபிள்யு. புஷ் அரசு யுனெஸ்கோவில் மீண்டும் இணைந்தது நினைவுகூரத்தக்கது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%