news Breaking News
clock

முல்லைப் பெரியாறு அணையில் துணை மேற்பார்வை குழு ஆய்வு!

முல்லைப் பெரியாறு அணையில் துணை மேற்பார்வை குழு ஆய்வு!

தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தென்மண்டல இயக்குநர் கிரிதர் தலைமையில் 5 பேர் கொண்ட துணை மேற்பார்வை குழுவினர் முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர்.


பெரியாறு வைகை படுகை வட்ட மேற்பார்வை பொறியாளர் சாம் இர்பின், கம்பம் கோட்டம் முல்லைப் பெரியாறு அணையின் செயற்பொறியாளர் செல்வம் உட்பட ஐந்து பேர் கொண்ட குழுவினர் முல்லைப் பெரியாறு அணைக்கு தேக்கடி படகுத் துறையில் இருந்து படகு மூலமாக அணைக்கு சென்றனர்.


முல்லைப் பெரியாறு அணைக்கு தேக்கடி படகுத் துறையில் இருந்து படகு மூலமாக அணைக்கு சென்ற துணை மேற்பார்வை குழுவினர்.

முல்லைப் பெரியாறு அணைக்கு தேக்கடி படகுத் துறையில் இருந்து படகு மூலமாக அணைக்கு சென்ற துணை மேற்பார்வை குழுவினர்.

தொடர்ந்து பிரதான அணை, பேபி அணை, வல்லக்கடவு சாலை சீரமைத்தல், அணைக்கு நீர்வரத்து, அணையின் நீர்மட்டம் உள்ளிட்ட 13 பராமரிப்பு பணிகளை குறித்து தொடர்ந்து மேற்பார்வை செய்து ஆய்வு செய்து வருகின்றனர்.


இந்த ஆய்வில் கேரளத்தை சேர்ந்த இடுக்கி கட்டப்பனை நீர் பாசனத்துறை லிவின்ஸ் கோட்டார், துணை கோட்ட பொறியாளர் ஜித் ஆகியோர் கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News