முதிர்ச்சி

முதிர்ச்சி


அமைதியின் கதவுகள்

அடைத்தே கிடக்கின்றன.

தனிமையின் இரவுகள்

தவித்தே நிற்கின்றன.

இதயத்தின் வலிமையும்

எங்கே போயிற்று 

தெரியவில்லை.

அறிவின் சுடரோ 

அணைந்து நாளாயிற்று.

விவேகத்தின் குகையில்

நுழைந்து கொண்டிருக்கிறேன்,

எனக்கே தெரியாமல்!


-கே. பி. ஜனார்த்தனன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%