மாங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் மருத்துவ முகாம் மற்றும் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா
Oct 27 2025
31
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் மாங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் மருத்துவ முகாம் மற்றும் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தலைமையாசிரியர் மாரிமுத்து தலைமை தாங்கினார். ஆசிரியர் செல்வம் வரவேற்றார்.
மருத்துவர்கள் முனுசாமி அன்புராணி மற்றும் தலைமை ஆசிரியர் மா. பழனி ஆகியோர் இயற்கை மற்றும் சித்த மருத்துவம் சார்ந்த ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் 750 மாணவர்களுக்கு மரக்கன்றுகளை இயற்கை மற்றும் கல்வி அறக்கட்டளை சிகரல அள்ளி மூலமாக முத்துக்குமார் மாணவர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துக்கொண்டார்கள்.
முடிவில் ஆசிரியர் அசோக்குமார் நன்றி கூறினார்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?