news Breaking News
clock

மருத்துவருக்கு ரூ.10 லட்சம் அபராதம்

மருத்துவருக்கு ரூ.10 லட்சம் அபராதம்

சென்னை: மூக்கடைப்பு சிகிச்சையின் போது மருத்துவ அலட்சியம் காரணமாக பெண் மூளைச்சாவு அடைந்து உயிரி ழந்த வழக்கில், மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது. 2005 இல் வடபழனி விஜயா மருத்துவமனையில் எண்டோஸ்கோபி பரிசோதனையின் போது தேவேந்திரா (38) மூளைச்சாவடைந்து இறந்தார். இது தொடர்பாக அவரது கணவர் போஜய்யா தொடர்ந்த வழக்கில், நீதிபதி ஆர்.சுப்பையா “உணவுக்குப் பின் 6 மணி நேர இடை வெளியை கடைப்பிடிக்காமை, நோயாளியின் சர்க்கரை அளவு மற்றும் குறைந்த ஹீமோகுளோபின் குறித்து கருத்தில் கொள்ளாமை” ஆகியவை மருத்துவ அலட்சியம் என்று தீர்ப்ப ளித்தார். அறுவை சிகிச்சை நிபுணர் ம.ஜெயராமி ரெட்டி மற்றும் மயக்கவியல் நிபுணர் ஏ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ரூ.10 லட்சம் இழப்பீடும், ரூ.50,000 வழக்குச் செலவையும் 8 வாரங்களில் வழங்க உத்தரவிடப்பட்டது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News