news Breaking News
clock

மனைவியை பற்றி

மனைவியை பற்றி

மனைவியை பற்றி

கவிதைகள் ஏன்டா

எழுத மாட்ற என்றாள்

தோழியொருத்தி

கோபம் கொள்ளும்

எப்போதும்

குறை மட்டுமே சொல்லும்

மனைவி

இராட்சசியாக தான் தெரிகிறாள்

அது கற்பனை என்று தெரிந்தாலும்

நிழல் உலகம் என்று புரிந்தாலும்

நிம்மதி தரும்

அந்த கானல் வன காதலி

தேவதையாக தான் தெரிகிறாள்.

உண்மை சுடும் என்பதால்

ஒரு சின்ன மௌனத்தை

உதிர்த்து விட்டு

கேள்வி கேட்ட தோழியிடம்

பதிலேதும் சொல்லாமல்

கடந்து சென்றேன்.


-லி.நௌஷாத் கான்-

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News