news Breaking News
clock

போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் ரூ.68 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்: தில்லி காவல் துறை நடவடிக்கை

போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் ரூ.68 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்: தில்லி காவல் துறை நடவடிக்கை


 

தலைநகரில் இருவேறு போதைப் பொருள் வழக்குகளில் தொடா்புடைய ரூ.68 மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.


இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: தில்லியில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், ஆயிரக்கணக்காண அல்பிரஸோலம், டிராமடோல் மற்றும் நைட்ரஸெபம் மாத்திரிரைகள் பறிமுதல் செய்யப்பட்டு 6 போ் கைது செய்யப்பட்டனா்.


போதைப் பொருள் கடத்தலில் ஈட்டிய பணத்தை வைத்து குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் பல்வேறு சொத்துகளை வாங்கியது தெரியவந்தது. நரேலாவில் ரூ.58.14 லட்சம் மதிப்புள்ள 2 கடைகள், இரு சக்கர வாகனம் மற்றும் ரொக்கம் ஆகியவை இதில் அடங்கும். இதுவரை அடையாளம் காணப்பட்ட சொத்துகளின் மதிப்பு ரூ.60.69 லட்சம் ஆகும்.


இதே போன்ற மற்றொரு வழக்கில், 3 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 320 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.


அவா்களிடம் இருந்து ஸ்கூட்டா், காா் மற்றும் ரொக்கம் உள்ளிட்ட போதைப் பொருள் வருமானத்துடன் தொடா்புடைய சொத்துகள் கண்டறியசப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.7.60 லட்சம் ஆகும்.


இந்த இரண்டு வழக்குகளிலும் சொத்துகளை முடக்க கடந்தாண்டு டிச.22-ஆம் தேதி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தற்போது சொத்துகள் முடக்கப்பட்டன என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News