பொன் ஆடை...

பொன் ஆடை...


பெருங்கவிஞர் ஒருவருக்கு

பொன்னாடை போர்த்தி

வணங்கி நின்றேன்

புகைப்படத்தில்

பதிவாகும்வரை

புன்னகைத்தது இருவரின் முகங்களும்

பின்பு பேசி மகிழ்ந்து

பிரியாவிடை பெற்று

சென்றுகொண்டே

நினைத்துப் பார்க்கிறேன்

' எனக்கு யாரோ அணிவித்ததை

இன்று அவர்க்கு!

நாளை அவரும்

வேறு யாருக்கோ?'

ஓ...

பொன்னாடையின்

பயன்பாடு என்பது

இதுதானோ?



கருமலைப்பழம் நீ

74, திருப்பூர் குமரன் தெரு வியாசர்பாடி சென்னை 39

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%