பொது நல மனுதாக்கல் செய்து பணம் பறிக்கும் செயலை அனுமதிக்க கூடாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

பொது நல மனுதாக்கல் செய்து பணம் பறிக்கும் செயலை அனுமதிக்க கூடாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு


 

மதுரை: பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்து, அவற்றின் மூலம் பணம் பறிக்கும் செயல்பாடுகளை அனுமதிக்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.


காரைக்​குடியை சேர்ந்த பூல்​பாண்டி என்​பவர், காரைக்​குடி நகராட்​சி​யில் அனு​ம​தி​யின்றி கட்​டப்​பட்ட கட்​டிடம் தொடர்​பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி, 2021-ம் ஆண்​டில் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் பொதுநல மனு தாக்​கல் செய்​தார்.


இந்த மனு நீதிப​தி​கள் ஜி.ஜெயச்​சந்​திரன், கே.கே.​ராமகிருஷ்ணன் அமர்வு முன்​னிலை​யில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் மனுவை திரும்​பப் பெறு​வ​தாக தெரிவிக்​கப்​பட்​டது.


இதை ஏற்க மறுத்த நீதிப​தி​கள், "பொதுநல மனுகளை தாக்​கல் செய்​து, அதன் மூலம் பணம் பறிக்​கும் நிலை உள்​ளது. பணம் கிடைத்​தவுடன் பொதுநல மனு திரும்​பப் பெறப்​படு​கிறது. இது ஏற்​கத்​தக்​கதல்ல. மேலும், நீதி​மன்​றத்​தின் நேரத்தை வீணடிக்​கும் செய​லாகும்.


எனவே, இந்த வழக்​கில் எடுக்​கப்​பட்ட நடவடிக்​கைகள் குறித்து அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும். இந்த வழக்கு 4 ஆண்​டு​களாக நிலு​வை​யில் உள்​ளது. பொதுநல மனுவை சிலரின் தனிப்​பட்ட நோக்​கங்​களை பூர்த்தி செய்​வதற்​காக பயன்​படுத்​து​வது நீதி​மன்​றத்​துக்கு வருத்​தத்​தை​யும், அதிர்ச்​சி​யை​யும் அளிக்​கிறது.


இது​போன்ற நடவடிக்​கைகளை ஊக்​குவிக்​கக் கூடாது. அரசு அலு​வலர்​களும் இதில் நோட்​டீஸ்​கூட அனுப்​பாமல் இருந்​தது ஏற்​கத்​தக்​கதல்ல. தற்​போது​தான் நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது.


பொதுநல மனு தாக்​கல் செய்​பவர்​கள் முறை​யான காரணம் இல்​லாமல் மனுவை திரும்​பப் பெற அனு​மதி கோரி​னால், அதிக அபராதம் விதிக்​கப்​படும். மனு​தா​ரர் வரும் 9-ம் தேதி நீதி​மன்​றத்​தில் ஆஜராக வேண்​டும்​" என்​று உத்​தர​விட்​டனர்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%