பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதி
Jan 19 2026
11
பெங்களூரு: ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு சாம்பியன் பட்டம் வென்றது. முதல் முறையாக அந்த அணி பட்டம் வென்றதை தொடர்ந்து ஜூன் 4-ம் தேத பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி மைதானத்துக்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் இறந்தனர். இதைத் தொடர்ந்து சின்னசாமி மைதானத்தில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளையும் நடத்த கர்நாடக மாநில அரசு தடைவிதித்தது.
மேலும் மைதானத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழு ஒன்றையும் அரசு நியமித்தது. இந்த குழு மைதானத்தில் பல்வேறு கட்ட ஆய்வுகளை நடத்தியது. இதுஒருபுறம் இருக்க வெங்கடேஷ் பிரசாத் தலைமையிலான கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் அரசு தரப்பு மற்றும் விசாரணைக்குழுவுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வந்தது.
இந்நிலையில் கர்நாடக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்புக்குழு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாதுகாப்பு பணிகள் திருப்திகரமாக இருப்பதாக அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. இதன் அடிப்படையில் உள்துறை அமைச்சகம் மைதானத்தில் மீண்டும் போட்டிகளை நடத்துவதற்கு கர்நாடக கிரிக்கெட் சங்கத்துக்கு அனுமதி அளித்துள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?