பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதி

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதி


 

பெங்களூரு: ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு சாம்​பியன் பட்​டம் வென்​றது. முதல் முறை​யாக அந்த அணி பட்​டம் வென்​றதை தொடர்ந்து ஜூன் 4-ம் தேத பெங்​களூரு சின்​ன​சாமி மைதானத்​தில் வெற்றி கொண்​டாட்ட நிகழ்ச்சி நடை​பெற்​றது.


இதையொட்டி மைதானத்​துக்கு வெளியே ஏற்​பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் இறந்​தனர். இதைத் தொடர்ந்து சின்​ன​சாமி மைதானத்​தில் அனைத்து வித​மான கிரிக்​கெட் போட்​டிகளை​யும் நடத்த கர்​நாடக மாநில அரசு தடை​வி​தித்​தது.


மேலும் மைதானத்​தில் மேற்​கொள்​ளப்பட வேண்​டிய பாது​காப்பு பணி​கள் குறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழு ஒன்​றை​யும் அரசு நியமித்​தது. இந்த குழு மைதானத்​தில் பல்​வேறு கட்ட ஆய்​வு​களை நடத்​தி​யது. இதுஒரு​புறம் இருக்க வெங்​கடேஷ் பிர​சாத் தலை​மையி​லான கர்​நாடக கிரிக்​கெட் சங்க நிர்​வாகி​கள் அரசு தரப்பு மற்​றும் விசா​ரணைக்​குழு​வுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வந்​தது.


இந்​நிலை​யில் கர்​நாடக அரசால் நியமிக்​கப்​பட்ட சிறப்​புக்​குழு பெங்​களூரு சின்​ன​சாமி மைதானத்​தில் பாது​காப்பு பணி​கள் திருப்​தி​கர​மாக இருப்​ப​தாக அரசுக்கு அறிக்கை அளித்​துள்​ளது. இதன் அடிப்​படை​யில் உள்​துறை அமைச்​சகம் மைதானத்​தில் மீண்​டும் போட்​டிகளை நடத்​து​வதற்கு கர்​நாடக கிரிக்​கெட் சங்​கத்​துக்கு அனு​மதி அளித்​துள்​ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%