news Breaking News
clock

பெங்களூரில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான ரோல்பால் போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த சின்னாளபட்டி மாணவர்களுக்கு பாராட்டு.

பெங்களூரில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான ரோல்பால் போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த சின்னாளபட்டி மாணவர்களுக்கு பாராட்டு.



நிலக்கோட்டை,அக்.08:


பெங்களூரில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான ரோல்பால் போட்டியில் தமிழக அணி சார்பில் கலந்துகொண்டு முதலிடம் பிடித்து சாதனை படைத்த சின்னாளபட்டி மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கி பாராட்டினர்.


திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் கடந்த வாரம் பெங்களூரில் நடைபெற்ற 14 நான்கு வயதிற்குட்பட்டோருக்காள தென் இந்தியப அளவிலான ரோல்பால் போட்டியில்,தமிழக அணி சார்பில் கலந்துகொண்டு முதலிடம் பிடித்து சாதனை படைத்த சின்னாளப்பட்டி மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சின்னாளப்பட்டி டிரீம் ரோட்டரி சங்கத்தின் தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார்,மாவட்ட ஆளுனர் கார்த்திக் முன்னிலை வகித்தார்,ராஜன் உள் விளையாட்டு அரங்க நிர்வாக இயக்குனர் தங்கலெட்சுமி வரவேற்றார், நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட தலைவர் ரோட்டரி சங்க மீனா,சர்வதேச நடுவர் பிரேம்நாத் ஆகியோர் சாதனை படைத்த மாணவ மாணவியர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினர்.

மேலும் இந்த பாராட்டு நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள்,பெற்றோர்கள் மற்றும் சக மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News