செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பிரசித்தி பெற்ற பாண்டுரங்கன் கோவில் தேர் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது
Jul 18 2025
10

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே கோவிந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பாண்டுரங்கன் கோவில் உள்ளது. பாண்டுரங்கனுக்கு முதன் முதலாக சிற்பசாஸ்திர முறைப்படி, தேர் நிறுவப்பட்டு செப்.14-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. இந்த தேருக்கான வடம், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் தயாரிக்கப்பட்டது. கடந்த 2 வாரங்களாக விரதம் இருந்து 150 பணியாளர்கள் 133 அடி நீள 2 தேர் வடங்களை தயாரித்தனர். ஒரு வடத்துக்கு 260 சிறுகயிறுகள் இணைத்து தயாரிக்கப்பட்டது. 2 வடத்தின் எடை 3 டன். நேற்று தயாரிப்பு பணி முடிவடைந்து, பாண்டுரங்கன் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%