பாலியல் வன்​கொடுமை வழக்கில் கைதான ஆம் ஆத்மி எம்​எல்ஏ ஹர்​மீத்: துப்​பாக்​கி​யால் சுட்​டு​விட்டு தப்​பியோட்​டம்

பாலியல் வன்​கொடுமை வழக்கில் கைதான ஆம் ஆத்மி எம்​எல்ஏ ஹர்​மீத்: துப்​பாக்​கி​யால் சுட்​டு​விட்டு தப்​பியோட்​டம்

சண்​டிகர்: பாலியல் வன்​கொடுமை வழக்​கில் கைதான ஆம் ஆத்மி எம்​எல்ஏ துப்​பாக்​கி​யால் சுட்​டு​விட்டு தப்​பியோடி​யுள்​ளார். அவரை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர். பஞ்​சாப் மாநிலம், சனூர் சட்​டப் பேரவை தொகு​தி​ ஆம் ஆத்மி எம்​எல்​ஏ​ ஹர்​மீத் பதன்​மஜ்​ரா மீது, ஒரு பெண் போலீ​ஸில் புகார் கொடுத்​திருந்​தார். அதில், ‘தனது மனை​வியை விவாகரத்து செய்​து ​விட்​ட​தாக பொய் சொல்லி எம்​எல்ஏ ஹர்​மீத் என்​னுடன் தொடர்பு வைத்​திருந்​தார்.


மேலும், என்னை பாலியல் வன்​கொடுமை செய்​ததோடு, மிரட்​டல், ஆபாச படங்​கள் போன்​றவற்றை அனுப்​பும் செயல்​களில் ஈடுபட்டார்” என்று குறிப்​பிட்​டிருந்​தார். அதன் அடிப்​படை​யில் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து ஹர்​மீத்தை நேற்​று, கர்​னால் என்ற இடத்​தில் கைது செய்​தனர்.


இதைத் தொடர்ந்து அவரை உள்​ளூர் போலீஸ் நிலை​யத்​துக்​கு, போலீஸ் அதி​காரி​கள் அழைத்து வந்​தனர். அங்கு அவரும், அவரது கூட்​டாளி​களும் போலீ​ஸார் மீது துப்​பாக்​கி​யால் சுட்​டு​விட்டு 2 கார்​களில் தப்​பித்​துச் சென்​று​விட்​டனர்.


இதையடுத்து போலீ​ஸார், அவர்​களை வாக​னத்​தில் விரட்​டிச் சென்​றனர். ஓரிடத்​தில் அவர்​களது ஒரு காரை மட்​டும் போலீ​ஸார் மடக்​கினர். காரிலிருந்து 3 துப்​பாக்​கி​கள் மட்​டும் பறி​முதல் செய்​யப்​பட்​டன. மற்​றொரு காரில் இருந்த எம்​எல்ஏ தப்​பிச்​சென்​று​விட்​டார். அவரை போலீ​ஸார் தீவிர​மாக தேடி வரு​கின்​றனர். எம்​.எல்​.ஏ. மீது புகார் கொடுத்த அந்த பெண் திரு​மண​மாகி விவாகரத்து பெற்றவர்.


ஹர்​மீத் பதன்​மஜ்​ரா​வுடன் அவருக்கு காதல் ஏற்​பட்ட நிலை​யில், எம்​எல்ஏ தனது மனை​வியை 2013-ல் விவாகரத்து பெற்​ற​தாக கூறி கடந்த 2021-ல் அந்த பெண்ணை திரு​மணம் செய்​து​கொண்​டார். ஆனால் 2022 -ம் ஆண்​டு, ஹர்​மீத் பதன்​மஜ்​ரா, சனூர் தொகு​தி​யில் போட்​டி​யிட்​ட​போது, அவர் தனது முதல் மனை​வி​யின் பெயரை பிர​மாணப் பத்​திரத்​தில் குறிப்​பிட்​டிருந்​தார். இதைப் பார்த்த 2-வது மனை​வி, இது குறித்து கேட்​டதற்கு தனது முதல் மனை​வியை வி​வாகரத்து செய்​து​விடு​வ​தாக கூறிவந்ததாக தெரியவந்துள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%