news Breaking News
clock

பாஞ்சஜன்யம்

பாஞ்சஜன்யம்


பாஞ்சஜன்யம் என்பது ஒரு அபூர்வமான சங்கு!

 பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் கைகளில் இருப்பது இந்த சங்கு தான்!

ஒரு சங்கில் உள்ளே 4 சங்கங்கள் இருக்கும்!மொத்தத்தில் ஐந்து சங்குகள்!

ஆகவே பாஞ்சஜன்யம் என்பார்கள்.

மேலதிக தகவல்கள்:

பாஞ்சஜன்யம் என்பது கடலில் கிடைக்கும் ஒரு சங்கு தான். ஆனால் அந்த சங்கு சாமான்யமாக கிடைப்பதில்லை. ஆயிரம் சிப்பிகள் சேருமிடத்தில் ஒரு இடம்புரி சங்கு கிடைக்குமாம்.

ஆயிரம் இடம்புரி சங்குகள் விளையும் இடத்தில் ஒரே ஒரு வலம்புரி சங்கு கிடைக்குமாம். வலம்புரி சங்குகள் ஆயிரக் கணக்கில் எங்கு இருக்கிறதோ அங்கே அரிதான சலஞ்சலம் என்ற சங்கு கிடைக்குமாம்.

சலஞ்சலம் சங்கு பல்லாயிரக் கணக்கில் உற்பத்தியாகுமிடத்தில் அரிதினும் அரிதான பாஞ்சஜன்ய சங்கு கிடைக்கும்.


சங்கொலி என்பதே பிரணவ ஓசையை வெளிப்படுத்தும் ஒரு இயற்கை வாத்தியம். அதிலும் சுத்தமாக அக்ஷரம் பிசகாமல் பிரணவ மந்திரத்தை ஒலிப்பது பாஞ்சஜன்யம் சங்கு மட்டும் தான். அந்த சங்கு கிருஷ்ணன் கையில் மட்டும் தான் இருக்கும் !!


|விஷ்ணோர் முகோத்தா நில பூரிதஸ்ய|

|யஸ்ய த்வநிர் தானவ தர்ப்பஹந்தா:|

|தம் பாஞ்ச ஜன்யம் சசி கோடி சுப்ரம்


சங்கம் ஸதா(அ)ஹம் சரணம் ப்ரபத்யே|


மேற்கண்ட பாடலில்,


மகாவிஷ்ணுவின் பவளச் செவ்வாய்

வழியே வெளிவரும் காற்றினால் ஒலி எழுப்பப்படுவதும் தன் கம்பீர ஒசையால் அசுரர்களுக்கு ஒலி அச்சத்தைக் கொடுக்கக் கூடியதும், வெண்மை வண்ணத்தில் ஒரு கோடி நிலவுகளின் ஒளிக்கு ஈடானதுமான பாஞ்சஜன்யம் என்ற சங்கை வணங்குகின்றேன்! எப்போதும் சரணடைகின்றேன்! என்பது பொருளாகும்.


 கீழ்க்காணும் இந்த படத்தில் காணும் சங்கு உள்ளே நான்கு சங்குகள் இருக்கின்றன!

.

இது மிக மிக அபூர்வமானது! இந்த சங்கின் நுனியிலும் அடியிலும் விளிம்பிலும் தங்க வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. 

.

சங்கின் நுனியில் ரத்தினங்கள் கொண்டு அழகு படுத்தப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட அபூர்வமான பாஞ்சஜன்ய சங்கு மைசூரில் உள்ள ஸ்ரீசாமுண்டீஸ்வரி தேவியின் ஆலயத்தில் அன்னையின் அபிஷேகத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

.

இந்த சங்கு மைசூர் சமஸ்தான மன்னர்களால் மைசூர் சாமுண்டீஸ்வரி அன்னைக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது!!


ஒம்நமோ நாராயணாய. 


அனுப்புதல்:

ப.‌கோபிபச்சமுத்து,

பாரதியார் நகர்,

கிருஷ்ணகிரி - 1

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News