news Breaking News
clock

நவராத்திரி பாடல்கள்

நவராத்திரி பாடல்கள்

அன்னை காமாட்சி 

காவடி சிந்து


அன்னையே ஆனந்த வல்லியே

அகிலாண்ட கோடி நாயகியே 

அம்ருத ரூபிணி ஆனந்த நாயகி 

அருள் புரிவாய் அம்மா காமாட்சியே 

 


உன்னை தொழுது மகிழ்ந்தேனே

 உலகில் நீயின்றி வேறு யாரம்மா

 உயிர்களை காக்கும் நாயகி

 உன்பதம் பணிந்தேன் காமாட்சியே 



என்னையே தந்து பணிந்தேனே

என்றும் அருள் புரிந்து காத்திடம்மா

எந்த நிலையிலும் பணிந்திட

என் கரம் குவித்தேன் காமாட்சியே 



தாயே உந்தன் கீர்த்தனை

தமிழின் இன்ப வெள்ளமே

உள்ளம் உருக பிரார்த்தனை

உந்தன் அருளின் பிரவாகமே


அன்பின் வடிவம் நீயன்றோ

அழகின் உருவம் நீயன்றோ

அருளும் கைகள் உனதன்றோ

அனைத்தும் உந்தன் அசைவன்றோ


அன்னை உந்தன் அருளிலே

அகமும் மகிழ்ந்த மனதிலே

அன்பும் அறனும் நினைவிலே

அனைத்தும் தருவாய் வாழ்விலே


நற்கல்வி பெற கலைமகளாய்

நற்செல்வம் பெற அலைமகளாய்

நல்வாழ்வு பெற உமையவளாய்

நவராத்திரியில் துர்க்கையாய் வருவாய்


அம்மா உனைப் பாட பாட கீதமே

ஆனந்தமாய் கேட்டு அருள்வாயம்மா🙏🏻



சோபனா விச்வநாதன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News