நம் வாசவி அம்மன் அக்னி பிரவேஷ தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் ஜனவரி- 22 சேத்தியாதோப்பு ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அக்னி பிரவேச தினத்தை முன்னிட்டு நம் வாசவி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், வண்ணமலர் மாலைகளால் அலங்கரித்து, தீபங்கள் ஏற்றி, வேத மந்திரங்கள் ஒலிக்க, ஹோமங்கள் வளர்த்து, ஆர்ய வைஸ்ய பெண்கள் அனைவரும் பாட்டுக்கள் பாடி, பிரசாதம், நெய்வேத்தியங்களுடன், வண்ண பூக்களால் அர்ச்சனைகள் செய்து, மகா தீபாராதனையும் நடைபெற்றது. ஏராளமான ஆர்ய வைஸ்ய ஆண்கள், பெண்கள் அனைவரும் பூஜையில் கலந்து கொண்டு ஜெய் வாசவி ஜெய் ஜெய் வாசவி என்று அனைவரும் நம் வாசவி அம்மனை கோஷமிட்டு வேண்டி அருள் பெற்றனர். அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?