தைப்பொங்கலை முன்னிட்டு 2000 குடும்பத்தினருக்கு நலத்திட்டம்
Jan 07 2026
16
தைப்பொங்கலை முன்னிட்டு 2000 குடும்பத்தினருக்கு நலத்திட்டம்
திருப்பத்தூர், ஜன. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட, 2-வது வார்டு உறுப்பினர் குட்டி என்கின்ற சீனிவாசன் தலைமையில் 2000 நபர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் விளையாட்டுப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பெண்களுக்கான கோலப்போட்டி மற்றும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. நல்லதம்பி திருப்பத்தூர் நகர செயலாளர் ராஜேந்திரன். திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன். மாவட்ட அறங்காவல் குழு தலைவர் சந்திரசேகரன். பொதுக்குழு உறுப்பினர் டி ரகுநாத். செல்வம். வழக்கறிஞர் பாபு. நகர மன்ற உறுப்பினர் வெள்ள ராஜா. ஆசிரியர் ரவி. ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?