தேமுதிக - தவெக கூட்டணி அமையுமா என்பது ஜனவரியில் தெரியவரும்: விஜயபிரபாகரன்

தேமுதிக - தவெக கூட்டணி அமையுமா என்பது ஜனவரியில் தெரியவரும்: விஜயபிரபாகரன்

மதுரை:

விஜய் கட்சியுடன் தேர்தலில் தேமுதிக கூட்டணி சேர வாய்ப்புள்ளதா என்பது பற்றி ஜனவரியில் பொதுச் செயலாளர் அறிவிப்பார் என, அக்கட்சியின் இளைஞரணி மாநிலச் செயலாளர் விஜயபிரபாகரன் மதுரையில் தெரிவித்தார்.


மதுரை எல்லீஸ் நகர் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேமுதிக பழங்காநத்தம் பகுதிச் செயலாளர் லட்சுமணன் இல்ல விழாவில் தேமுதிக இளைஞரணி மாநிலச் செயலாளர் விஜய பிரபாகரன் பங்கேற்றார்.


இதன்பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் ‘ இல்லம் தேடி, உள்ளம் நாடி’ என்ற இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம் செய்கிறோம். தேமுதிக எந்தக் கட்சி கூட்டணிக்கு செல்கிறதோ அக்கட்சிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும். தற்போது, தேமுதிக மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்.


விஜய் கட்சியுடன் தேர்தல் கூட்டணி சேர வாய்ப்புள்ளதா என்பதை வரும் ஜனவரி 9-ம் தேதி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடக்கும் மாநாட்டில் பொதுச் செயலாளரே அறிவிப்பார். விஜயகாந்துக்கும் , விஜய்க்கும் ஒரு நல்ல நட்பு உள்ளது.


நாம் தமிழர் கட்சி சீமான் அன்றைய தினம் கேப்டன் ட்ரெண்டிங்கில் இருந்தபோது, கேப்டனை திட்டியதால் ஓட்டு வாங்கினார். அரசியலில் நிரந்தர நண்பனும் , எதிரியும் இல்லை. விஜயகாந்த் ரசிகர்கள், தொண்டர்கள் அவ்வளவு முட்டாள்கள் அல்ல.அண்ணன் விஜய்யை எங்களுக்கும் பிடிக்கும். அவரது திரைப்பட நிகழ்ச்சிகள் பலவற்றிற்கு நான் சென்றிருக்கிறேன்.


மதுரை எனக்கு புதுசு அல்ல. கேப்டன் கரம் பிடித்து வீதி வீதியாக வலம் வந்துள்ளேன். மதுரையின் சிறப்பு என்றால் சப்பாடு தான். இங்குள்ள சிறப்பான உணவுகளை எனக்கு என் அப்பா வாங்கிக் கொடுத்துள்ளார். பல எதிர்ப்புகளை மீறி தேமுதிக கட்சி வந்துள்ளது அதற்கு கேப்டன் விஜயகாந்த் தான் காரணம். எனது அப்பாவை நான் மிஸ் பண்ணுவது போல தமிழகத்தில் ஒவ்வொருவரும் மிஸ் பண்ணுகின்றனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%