தீபாவளி சீட்டு மோசடி: தலைமறைவான பெண் கைது

தீபாவளி சீட்டு மோசடி: தலைமறைவான பெண் கைது



சென்னை, நவ.1 – ஆர்.கே நகர் பகுதி யில் தீபாவளி சீட்டு நடத்தி சுமார் ரூ.5 லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைமறை வாயிருந்த பெண் கைது செய்யப்பட்டார். தண்டையார்பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்த பத்மாவதி, பவர் ஹவுஸ் பகுதியில் உணவகத்தில் வேலை பார்த்தபோது, உணவக உரிமையாளர் தமிழ்செல்வி தீபாவளி சீட்டு நடத்துவதாக தெரிவித்தார். இதையடுத்து பத்மாவதி தனக்கு தெரிந்த 25 நபர்களை 2024ஆம் ஆண்டு தீபாவளி சீட்டில் சேர்த்தார். ஒரு வருடமாக சுமார் ரூ.5 லட்சம் வசூல் செய்யப்பட்டது. 2024 தீபாவளிக்கு சீட்டு முதிர்வு தொகையை கேட்ட போது செல்வி பணம் தராமல் தொடர்ந்து ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பத்மாவதியின் புகாரின் பேரில் கடந்த அக்.5 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. செல்வி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரினார். ஆனால் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்யாமலும், நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றாமலும் தலைமறை வானார். ஆர்.கே நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் தலை மையிலான காவல் குழு தீவிர தேடுதலில் செல்வியை கைது செய்துள்ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%