தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்ற தீர்ப்பை வரவேற்று கோயிலில் தேங்காய் உடைத்த மனுதாரர்

தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்ற தீர்ப்பை வரவேற்று கோயிலில் தேங்காய் உடைத்த மனுதாரர்


 

மதுரை: ​திருப்பரங்குன்றம் தீபத்​தூண் தொடர்​பான தீர்ப்பை வரவேற்​று, வழக்கு தொடர்ந்த மனு​தா​ரர் ராம.ரவிக்​கு​மார் மற்​றும் வழக்​கறிஞர் அருண் சுவாமி​நாதன் ஆகியோர் 108 தேங்​காய்​களை உடைத்​தனர்.


இவ்​வழக்​கின் மனு​தா​ரர் ராம.ரவிக்​கு​மார் மதுரை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: திருப்​பரங்​குன்​றம் தீபத்​தூணில் தீபம் ஏற்ற வேண்​டும் என்று நீதி​மன்​றம் அளித்​துள்ள தீர்ப்​பை, முருக நீதி​யாகப் பார்க்​கிறேன். தீர்ப்​பின் நகலை முரு​கன் பாதத்​தில் வைத்​து, எனது கடமையை நிறைவேற்றி விட்​டேன்.


இந்​துக்​களுக்​கும், முஸ்​லிம்​களுக்​கும் எந்​தப் பிரச்​சினை​யும் இல்​லை. சகோ​தர​ராக, மத நல்​லிணக்​கத்​துடன் செயல்​படும் மக்​களிடையே தமிழக அரசே பிரச்​சினையை ஏற்​படுத்​து​வ​தாக தீர்ப்​பின் மூலம் நீதி​மன்​றம் அரசுக்கு சவுக்​கடி கொடுத்​துள்​ளது. தமிழக அரசைக் கண்​டித்து உயிர்​நீத்த தீபப் போராளி பூர்​ணசந்​திரனுக்கு இந்த தீர்ப்பை சமர்ப்​பிக்​கிறோம்.


முரு​கன் கோயில் காணிக்கை பணத்​தில் சம்​பளம் பெற்​று​விட்​டு, அறநிலை​யத் துறை​யினர் முரு​க​னுக்கு எதி​ராக செயல்​பட்​டனர். இவ்​வாறு அவர் கூறி​னார். மனு​தா​ரரின் வழக்​கறிஞர் அருண் சுவாமி​நாதன் கூறும்​போது, “நீ​தி​மன்​றத்​தில் தமிழக அரசு முன்​வைத்த பொய்​களுக்கு முரு​கன் பதில் கொடுத்​துள்​ளார். சட்​டம் ஒரு​புறம் இருந்​தா​லும், தர்​மம்​தான் என்​றும் நிலைக்​கும் என்​ப​தற்​கேற்ப தீர்ப்பு வந்​துள்​ளது.


<div class="paragraphs"><p>தீர்ப்பை வரவேற்று இனிப்புகள் வழங்கிய திருப்பரங்குன்றம் கோட்டைத் தெரு பகுதி பெண்கள். </p></div>

தீர்ப்பை வரவேற்று இனிப்புகள் வழங்கிய திருப்பரங்குன்றம் கோட்டைத் தெரு பகுதி பெண்கள்.


தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவை செயல்​படுத்​த​ாததற்கு காரணம் அரசி​யல்​தான் என்று நீதி​மன்​றம் தெளி​வாகக் கூறி​யுள்​ளது. தயவுசெய்து இதில் அரசி​யல் செய்​யாதீர்​கள். அன்றே தீபம் ஏற்​றி​யிருந்​தால், அரை மணி நேரத்​தில் நிகழ்வு முடிந்​திருக்​கும்” என்​றார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%