திருமுல்லைவாசலில் சுனாமி 21 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி ஊர்வலம்
Dec 26 2025
10
டிசம்பர் 2004 சுனாமி ஆழிப்பேரலையில்
உயிர் நீத்தவர்களுக்கு
இதய அஞ்சலி செலுத்தும் 21 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா
திருமுல்லைவாசல் கிராமத்தில் நடைப்பெற்றது. திருமுல்லைவாசல் பேருந்து நிலையம் அருகே நினைவு அஞ்சலி ஊர்வலம் தொடங்கி கடற்கரை அருகில் உள்ள சுனாமி நினைவு தூணில் நிறைவடைந்தது. சீர்காழி சட்ட மன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் , கொள்ளிடம் ஒன்றிய முன்னாள் சேர்மன் ஜெயபிரகாஷ் , தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் , திருமுல்லைவாசல்
ஊர் தலைவர், பஞ்சாயத்தார்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மெழுகு வர்த்தி ஏற்றி மலர்களை தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?