திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் வேற்று மதத்தினரை பணி நீக்கம் செய்ய மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய்குமார் வலியுறுத்தல்

திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் வேற்று மதத்தினரை பணி நீக்கம் செய்ய மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய்குமார் வலியுறுத்தல்

திருமலை:

மத்​திய உள்​துறை இணை அமைச்​சர் பண்டி சஞ்​சய் குமார் நேற்று திருப்​பதி ஏழு​மலை​யானை தரிசனம் செய்​தார். அவருக்கு தேவஸ்​தானம் சார்​பில் தரிசன ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டன. அதன்​பின்​னர், கோயி​லில் உள்ள ரங்​க​நாயக மண்டபத்தில் அவருக்கு தீர்த்த, பிர​சாதங்​கள் வழங்கி கவுரவிக்​கப்​பட்​டது.


அதன் பின்​னர், கோயிலுக்கு வெளியே அவர் கூறியதாவது: திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தில் தவறான சான்​றிதழ்​கள் கொடுத்​து, தாங்​கள் இந்​துக்​கள்​தான் என சித்​தரித்​து, வேலை வாய்ப்பை பெற்று சுமார் ஆயிரத்​திற்​கும் மேற்​பட்ட இதர மதத்​தினர் தேவஸ்​தானத்​தில் பணி​யாற்றி வரு​கின்​றனர். இவர்​களை உடனடி​யாக இனம் கண்டு அனை​வரை​யும் வேலையை விட்டு நீக்க வேண்​டும்.


இவர்​களுக்கு சனாதனம் மீது நம்​பிக்கை இல்​லாத போது, எதற்​காக திருப்​பதி தேவஸ்​தானத்​தில் பணிபுரிய வேண்​டும். இந்​துக்​களில் யாராவது இது போல், மசூ​தி​கள் மற்​றும் தேவால​யங்​களில் ஊழியர்​களாக பணி செய்ய அந்த மதத்​தவர் ஒப்​புக்​கொள்​வார்​களா? இவர்​கள் திருப்​பதி தேவஸ்​தானத்​தில் பணி​யாற்​று​வதன் மூலம் உண்​மை​யான இந்​துக்​களுக்கு அந்த வேலை பறி​போனது.


ஆட்​சிகள் பல மாறி​னாலும், அறங்​காவலர்​கள் பலர் மாறி​னாலும் வேற்று மதத்​தவர் மட்​டும் தொடர்ந்து பணி​யாற்றி கொண்டே உள்​ளனர். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்​டும். உடனடி​யாக திருப்​பதி தேவஸ்​தானத்​தில் பணி​யாற்​றும் இந்து அல்​லாதவர்​களை இனம் காண வேண்​டும். அவர்​களை உடனடி​யாக அப்​பணி​யில் இருந்து நீக்க வேண்​டும்.


சமீபத்​தில் திருப்​பதி தேவஸ்​தானத்​தில் பல ஆண்​டு​களாக பணி​யாற்றி வந்த வேற்று மதத்தை சேர்ந்த ஒரு அதி​காரி, புத்​தூருக்கு சென்​று, அங்​குள்ள தேவாலா​யத்​தில் பிரார்த்​தனை செய்து வரு​கிறார் என தெரிந்​து, அவரை தேவஸ்​தானம் பணி நீக்​கம் செய்​தது. இப்​படி சுமார் ஆயிரம் பேர் திருப்​பதி தேவஸ்​தானத்​தில் இந்​துக்​கள் எனும் போர்​வை​யில் பணி​யாற்றி வரு​கின்​றனர். இவர்​களை விசா​ரணை செய்து பணி நீக்​கம் செய்ய வேண்​டும் என நான் வலி​யுறுத்​துகிறேன்.


மேலும், ஆந்​தி​ரா, தெலங்​கானா ஆகிய மாநிலங்​களில் தீப, தூப, நைவேத்​தி​யங்​கள் கூட செய்ய முடி​யாத பல கோயில்​கள் உள்​ளன. அவற்​றிற்கு திருப்​பதி தேவஸ்​தானம் உதவிட வேண்​டும். ஏழு​மலை​யான் மீது உண்​மை​யான பக்தி கொண்​ட​வர்​கள் மட்​டுமே திருப்​பதி தேவஸ்​தானத்​தில் பணி​யாற்ற வேண்​டும். இவ்​வாறு இணை அமைச்​சர் பண்டி சஞ்​சய் குமார் பேசி​னார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%