
புதுடெல்லி, ஆக. 14
சுதந்திர தினத்தையொட்டி தமிழக காவல்துறையில் 21 பேர் ஜனாதிபதி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சுதந்திர தினத்தையொட்டி, நாடு முழுவதும் காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றி வருவோருக்கு ஜனாதிபதியின் தகைசால் பணிக்கான விருது, ஜனாதிபதியின் பாராட்டத்தக்கப் பணிக்கான விருது ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் விருதுக்கு தேர்வானவர்களின் பட்டியலை மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டது.
2025 ஆண்டுக்கான ஜனாதிபதி விருதுகளுக்கு நாடு முழுவதும் உள்ள பாதுகாப்புப் படை, ஆயுதப் படை, காவல்துறை, தீயணைப்பு, ஊர்க்காவல் படை உள்ளிட்ட துறைகளில் இருந்து மொத்தம் 1,090 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தமிழக காவல்துறையைச் சேர்ந்த 21 அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஏடிஜிபி பால நாக தேவி, ஐஜி ஜி. கார்த்திகேயன், ஐஜி எஸ். லட்சுமி ஆகியோர் தகைசால் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எஸ்பி ஏ. ஜெயலட்சுமி, துணை ஆணையர் ஆர். சக்திவேல், எஸ்பி எஸ். விமலா, டிஎஸ்பி பி. துரைபாண்டியன், ஏஎஸ்பி பி. கோபாலசந்திரன், ஏஎஸ்பி கே. சுதாகர் தேவசகாயம், டிஎஸ்பி சி. சந்திரசேகர், உதவி ஆணையர் எஸ். கிறிஸ்டின் ஜெயசில், உதவி ஆணையர் எஸ். முருகராஜ், டிஎஸ்பி எம். வேல்முருகன் ஆகியோர் பாராட்டத்தக்கப் பணிக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆய்வாளர்கள் பி. பொன்ராஜ், ஜே. அதிசயராஜ், பி. ரஜினிகாந்த் எம். ரஜினிகாந்த், ஆர். நந்தகுமார், பி. ராமகிருஷ்ணன், உதவி ஆய்வாளர்கள் எஸ். ஸ்ரீவித்யா, சி. அனந்தன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவிப்பார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?