தமிழகத்தில் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு ரூ.249 கோடி

தமிழகத்தில் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு ரூ.249 கோடி


 

சென்னை: தமிழகத்​தில் உள்ள 2.23 கோடி குடும்ப அட்​டைதாரர்களுக்கு பொங்​கல் பரிசுத் தொகுப்​பாக அரிசி, சர்க்​கரை, முழு நீள கரும்பு வழங்க ரூ.248.66 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை பிறப்​பித்​துள்​ளது. மேலும் பொங்​கல் ரொக்​கப்பரிசு தொடர்​பாக விரைவில் அறிவிப்பு வெளி​யாகும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.


பொங்​கல் பண்​டிகையை முன்​னிட்டு, ஆண்​டு​தோறும் அரிசி குடும்ப அட்​டை​தா​ரர்​களுக்கு பொங்​கல் பரிசுத் தொகுப்​பாக தலா ஒரு கிலோ பச்​சரிசி, சர்க்​கரை மற்​றும் ஒரு முழு கரும்பு வழங்​கப்​பட்டு வரு​கிறது. இந்​தாண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வரு​வ​தால் ரொக்​கப்பரிசு வழங்​கப்​படும் என்ற எதிர்​பார்ப்பு உள்ளது.இதற்​கிடை​யில், பொங்​கல் பரிசை ரூ.5 ஆயிர​மாக தர வேண்​டும் என்று எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி வலி​யுறுத்​தி​யுள்​ளார்.


பெரும் எதிர்​பார்ப்பு உள்​ள​தால், ரொக்​கத் தொகை தொடர்​பான ஆலோ​சனை​கள் அரசு தரப்​பில் நடை​பெற்​றாலும், முழு வடிவம் பெற​வில்​லை. இதுகுறித்​து, ஜன.6-ம் தேதி நடை​பெறும் அமைச்​சர​வைக் கூட்​டத்​தில் முடி​வெடுக்​கப்​படலாம் எனத் தெரி​கிறது. இந்​நிலை​யில், தமிழகத்​தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்​டை​தா​ரர்​கள் மற்​றும் இலங்​கைத் தமிழர் முகாம்​களில் வசிக்​கும் குடும்​பத்​தினர் என 2 கோடியே 22 லட்​சத்து 91,710 குடும்ப அட்​டைகளுக்கு தலா ஒரு கிலோ அரிசி, சர்​க்கரை மற்​றும் ஒரு முழு நீளக் கரும்பு ஆகிய​வற்​றை பரிசுத் தொகுப்பாக வநியோகிக்க ரூ.248 கோடியே 66 லட்​சத்து 17,959 கோடி செலவு ஏற்​படும் என கணிக்​கப்​பட்டு நிதி ஒதுக்​கீடு செய்வதற்​கான அரசாணையை தமிழக அரசு வெளி​யிட்​டுள்​ளது.


அந்த அரசாணை​யில், ஒரு கிலோ அரிசி ரூ.25-க்கும், சர்க்​கரை ரூ.48.55-க்கும், ஒரு கரும்பு தோராய​மாக ரூ.38-க்​கும் கொள்​முதல் செய்​யும் வகை​யில் உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. இதுத​விர பொங்​கல் தொகுப்​புக்​கான டோக்​கன் விநி​யோகம் குறித்து கூட்​டுறவு சங்​கங்​களின் பதி​வாளர் அறி​வுறுத்​தல்​களை வெளி​யிட்​டுள்​ளார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%