தண்டலை நடுநிலைப் பள்ளியில் தேன்சிட்டு படைப்பாளர் மாணவருக்கு பரிசும் பாராட்டும்
Nov 06 2025
20
பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாதம் தோறும் தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் மாணவர்கள் படைப்பாற்றலை வெளிக் கொண்டு வரும் வண்ணம் வெளிவரும் மாத இதழ் தேன் சிட்டு இந்த இதழில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு படைப்புகளை பள்ளி கல்வித்துறை கேட்டுக்கொண்டிருந்தது அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் தண்டலை நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் ஆலோசனையின்படி மாணவர்கள் சுமார் 15 பேர் தேன்சிட்டு இதழுக்காக படைப்புகளை அனுப்பி வைத்திருந்தனர் அவற்றில் ரா ரிஷிகுமார் என்ற மாணவரின் படைப்பு இந்த மாத தேன் சிட்டு இதழில் வெளியிடப்பட்டுள்ளது அந்த மாணவருக்கு பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் மு.சீனிவாசன் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார் ஆசிரியர்கள் தேன்மொழி, மாலதி, சரண்ராஜ் மற்றும் பிரதீபா ஆகியோர் உடன் இருந்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?