தங்கம் விலை

தங்கம் விலை


இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,720 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.215 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


வெள்ளி விலை

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி இன்று ரூ. 5,000 குறைந்து, ரூ.3,40,000-க்கும், கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.340-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


திடீர் குறைவுக்கு என்ன காரணம்?


தங்கம் விலையின் இந்த போக்குக்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே கிரீன்லாந்து விவகாரத்தில் ஏற்பட்டுள்ள மோதல் மற்றும் வர்த்தகப் போர், அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி தொடர்பான அரசியல் தலையீடுகள் மற்றும் உலகளாவிய பணவீக்க பயம், பங்கு சந்தையில் நிலவும் நிச்சயமற்ற தன்மையால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீட்டில் சற்று தயக்கம் காட்டுவதன் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்களும், வியாபாரிகளும் தெரிவிக்கின்றனர்.


இத்தகைய வேகமான ஏற்றத்துக்கு பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கங்கள் அதிகமாக இருக்கலாம் என்றும், அது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்றும் வியாபாரிகள் கணிக்கின்றனர்.


3 நாள் சரிவுக்குப் பிறகு ஏற்றத்தில் பங்குச்சந்தை! நேர்மறையுடன் நிறைவு பெறுமா?

 

பங்குச் சந்தைகள் இன்று(வியாழக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.


மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 82,459.66 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11 மணியளவில் சென்செக்ஸ் 160.16 புள்ளிகள் அதிகரித்து 82,073.00 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.


அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 72.85 புள்ளிகள் உயர்ந்து 25,230.35 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.


கடந்த 3 நாள்கள் பங்குச்சந்தை கடும் சரிவுடன் வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 82,000 புள்ளிகளுக்குக் கீழ் சென்றது.


தொடர்ந்து இன்று குறைவான புள்ளிகள் வித்தியாசத்திலேயே ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. நேர்மறையுடன் வர்த்தகம் நிறைவு பெறுமா என்பது வார்த்தக நேர இறுதியில்தான் தெரிய வரும்.


இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 30 பங்குகளில் 29 பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின்றன. ஐசிஐசிஐ வங்கி மட்டும் சரிவில் வர்த்தகமாகிறது. சென்செக்ஸில் எடர்னல், ஏசியன் பெயிண்ட்ஸ், எஸ்பிஐ, அதானி போர்ட்ஸ், பிஇஎல், டாடா ஸ்டீல், இண்டிகோ, எம்&எம், ஆக்சிஸ் வங்கி, சன் பார்மா, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐடிசி, பவர் கிரிட், டெக் மஹிந்திரா, மாருதி சுசுகி, கோடக் வங்கி, இன்ஃபோசிஸ் ஆகியவை 0.5 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை உயர்ந்து அதிக லாபம் ஈட்டின.


நிஃப்டி மிட்கேப் குறியீடு 1.57 சதவீதமும் நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடு 1 சதவீதமும் உயர்ந்துள்ளன.


துறைவாரியாக நிஃப்டி பொதுத்துறை வங்கி குறியீடு அதிகபட்சமாக 2 சதவீதம் வரை உயர்ந்தது. நிஃப்டி பார்மா, ஆட்டோ குறியீடுகள் தலா 1.8 சதவீதமும் ஐடி குறியீடு 1 சதவீதமும் லாபத்துடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.


நேட்டோவில் கிரீன்லாந்தை இணைப்பதற்கான ஒப்பந்தத்தை எட்டியதால் ஐரோப்பிய நாடுகள் மீது வரிவிதிப்பு இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதையடுத்து உலகளவில் பங்குச்சந்தை வர்த்தகம் முன்னேற்றம் கண்டுள்ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%